Thursday 18 April 2013

சொக்கவைக்கும் பாடல்கள் தந்த சொர்ணலதா...

    இசைக்கு மயங்கா உயிர்கள் இவ்வுலகில் உண்டோ?  .நான் கொஞ்சம் ஓவரா(!!) மயங்கற கேஸ்..சிறுவயதில் சினிமா படம் பார்ப்பதிலும் பாடல்கள் கேட்பதிலும் அப்படி ஒரு ஈர்ப்பு. அதுவும் இளையராஜா பாட்டென்றால் சொல்லவே வேண்டாம்...உலகத்தையே மறந்துடுவன்..

இந்த ஓவர் இசை ஆர்வத்தால   நிறைய திட்டும் உதையும் வாங்கிய அனுபவமும் உண்டு. நான் எட்டாம் வகுப்பு படிக்கிற சமயத்தில் ,ஆசிரியர் வகுப்புக்கு வரவில்லையென்றால் வகுப்பில் என்னுடைய பாட்டுக்கச்சேரிதான் நடந்து கொண்டிருக்கும்..என் நண்பன் கிருபாகரன் பெஞ்சில் தாளம்போட நான் பாடிக்கொண்டிருப்பேன் ஆசிரியர் வருவதுகூட தெரியாமல்...அப்புறம் என்ன ஆசிரியர் அக்குளில் திருகி எடுத்துவிடுவார்..

அம்மா சிலநேரங்களில் மளிகைக்கடைக்குச் சென்று ஏதாவது இரண்டு மூன்று சாமான் வாங்கிவரச்சொல்வாங்க..ஒழுங்காகத்தான் செல்வேன் ..வழியில் யார்வீட்டிலாவது ரேடியோவில் பாட்டு போகும்..அவ்வளவுதான் அங்கேயே உறைந்து நின்றுவிடுவேன்..பாடல் முடிந்த பிறகுதான் அவ்விடத்தை விட்டு நகர்வேன்  ..என்ன காமெடியென்றால்  கடைக்குச் சென்றவுடன் அம்மா என்ன வாங்கிவரச் சொன்னார்கள் என்பதையே முழுதும் மறந்துவிடுவேன்...உடனே எதுவும் வாங்காமல் வீட்டிற்குத் திரும்பியதும் என் பெயரில் அர்ச்சனை நடக்கும்..

ஒருமுறை என்னுடைய சட்டையை அயர்ன் செய்வதற்காக சூடு வைத்தேன் ..கொஞ்சநேரம் பாட்டுகேட்கலாம் என்று டிவி முன் உட்கார்ந்தேன்.அவ்வளவுதான் அயர்ன் பாக்ஸ் சூடாகி பெட்ஷீட்டெல்லாம் எரிந்துவிட்டது..அன்று என் அண்ணனிடம் வாங்கிய உதை இன்னமும் மறக்கவில்லை..உங்களுக்கும் இதுபோன்ற அனுபவம் இருந்தால் கருத்துரையில் பகிருங்கள்..

சொர்ணலதா பாடல்கள் என்றால் இப்பொழுதும் உயிர்..அவ்வளவு சிறந்த பாடகி நம்மைவிட்டு சிறுவயதிலே மறைந்துவிட்டதாலோ என்னவோ அவருடைய பாடல்களை ஒருநாள் கூட கேட்காமல் இருக்கமாட்டேன்..

சின்னக்குயில் சித்ராவை ரொம்ப பிடிக்கும்..ஆனால் சொர்ணலதா பன்முகத் திறமையுள்ள ஒரு பாடகி..காதல் பாடலாகட்டும்,காமப்பாடலாகட்டும். சோகப்பாடல் வேண்டுமா  சொக்கவைக்கும் பாடல் வேண்டுமா  டப்பாங்குத்து பாட்டானாலும் சரி,,கிராமியத்து கம்மாக்கரை பாடலானாலும் சரி..அவருக்கு நிகர் அவரேதான்...

என்னைக்கவர்ந்த சொர்ணலதா பாடல்கள் ஒருசில உங்கள் பார்வைக்காக...

1.போறாளே பொன்னுத்தாயி-கருத்தம்மா

சொர்ணலதாவிற்கு சோகப்பாடலும் பாடத்தெரியும் என்று நிரூபித்த பாடல்.அவருக்கு தேசிய விருதைப் பெற்றுக்கொடுத்த பாடல்..

2.மொட்டு மொட்டு மலராத மொட்டு-காதல்கோட்டை

காதலையும் காமத்தையும் கலந்து கலக்கிய பாடல்..

3.அடி ஆசமச்சான் -கும்மிப்பாட்டு

கிரங்கடிக்கும் கிராமிய காதல் பாடல்

4.ஆட்டமா தேரோட்டமா-கேப்டன் பிரபாகரன்

கேட்கும் அனைவரையும் இன்றும் தாளம்போட வைக்கும் பாடல்.

5.மாலையில் யாரோ-சத்ரியன்

இளையராஜாவின் இசையில் மனதை மயக்கும் மந்திரப்பாடல்..

இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்..அதையெல்லாம் எழுத இந்த ஒரு பதிவு போதாது..காற்றில் கலந்துவிட்டது அவர் உயிர் மட்டுமல்ல, அவருடைய பாடல்களும்தான்..என்றும் நம் மூச்சுக்காற்றில் கலந்திருக்கும்..

5 comments:

  1. ஆகா... அனைத்தும் அருமையான பாடல்கள் ஆச்சே...

    இனிமையான பாடல்கள் மூலம் நம்மிடமே உள்ளார்... நன்றி...

    ReplyDelete
    Replies
    1. நன்றி தோழரே..

      Delete
  2. நல்ல பதிவு சார்..

    ReplyDelete
    Replies
    1. இன்னும் சர் பட்டமெல்லாம் கொடுக்கலீங்க..நான் ஒன்னும் அவ்ளோ பெரிய அப்பாடக்கர் இல்ல..

      Delete
  3. hahaha enna vidavum ninga periyavar.
    athilum teacher tana ninga..
    appo ungalai sir alaikkurathula thappe illa...
    nan ippo tan b,ed padikkkuren sir.

    ReplyDelete