Sunday 31 March 2013

சேதாரம் என்னும் வேதாளம்

அனைவருக்கும் வணக்கம். நேற்று கடலூரில் உள்ள பிரபல நகைக்கடைக்குச் சென்றிருந்தேன். மனைவிக்கு ஒரு செயின் எடுப்பதற்காக மனைவியுடன் சென்றிருந்தேன்.ஒரு  பத்து நிமிடத்தில் மாடல் செலக்ட் செய்து விலை பற்றி விசாரிக்கலானேன். ஏதேதோ கணக்கெல்லாம் போட்டு விற்பனைப்பெண் ஒரு பவுன் செயினின் விலை ரூபாய் 25800 என்று கணக்கு போட்டு சொன்னார். சிறிது நேரம் பேரம் பேசிய பிறகு அடுத்து ஒருவர் வந்து ஏதேதோ கணக்குப் போடத்தொடங்கினார். அவர் ஒரு 300 ரூபாய் குறைத்தார். இன்னும் எவ்வளவுதான் குறைப்பீர்கள் என்று கேட்டேன். அடுத்து முதலாளியைப் பார்க்கச் சொன்னார். அவர் மறுபடியும் முதலிலிருந்து கணக்கு போடத்தொடங்கினார். அவர் ஒரு 200 ரூபாய் குறைத்தார்.

நான் இன்னும் 500 ரூபாய் குறைக்கச்சொல்லிக் கேட்டேன். குறைக்க முடியாது என்று கூறிவிட்டார்கள். நானும் வேறு கடையில் வாங்கிக்கொள்கிறேன் என்று வந்துவிட்டேன். மறுபடியும் இன்று புதுவையில் இருக்கும்  பிரபல நகைகடைக்குச் சென்றேன். எங்கள் கடையில் ஒரே விலை, பேரம் கிடையாது என்று கூறிவிட்டார்கள்.நானும் சனியன் ஒழிகிறது என்று 5% சேதாரம் அழுதுவிட்டு ஒரு பவுனில் ஒரு செயின் வாங்கி வந்தேன். நகைக்கடைக்குச் சென்றால் இதெல்லாம் சாதாரணம்தானே ,இதற்கு எதற்கு ஒரு பதிவு என்றுதானே நினைக்கிறீர்கள்.இப்படி நினைத்துத்தான் தினம்தினம் நாம் ஏமாந்து கொண்டிருக்கிறோம். சேதாரம் என்னும் பெயரில் நம் முதுகில் தினமும் ஏறிக்கொண்டு நம்மை ஏமாற்றிக் கொண்டிருக்கும் வேதாளத்தைப்பற்றிய பதிவுதான் இது.

இலண்டனில் ஒரு பெண்மணி நகைக்கடைக்குச் சென்றிருக்கிறார். சேதாரம் எல்லாம் கொடுத்து ஒரு நகையை வாங்கியிருக்கிறார். பிறகு நேராக நுகர்வோர் கோர்ட்டுக்குச் சென்று நகையின் விலையைவிட அதிகமாக எதற்குச் சேதாரம் கொடுக்க வேண்டும் என்று ஒரு வழக்கைப் பதிவு செய்துவிட்டார்.. அப்புறம் என்ன , சேதாரம் என்று வாங்கிய தொகையை திரும்பவும் பெண்மணியிடம் திருப்பித்தருமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது.  என்னதான் சொல்ல வர்ர என்றுதானே கேட்கிறீர்கள்.
உண்மையில் எந்தவொரு நகைக்கடைக்காரருக்கும் சேதாரம் என்று எந்தவொரு சேதமும் நிகழ்வதில்லை.அவையெல்லாம் நம்மை ஏமாற்ற அவர்களுக்குக் கிடைத்திருக்கும் அஸ்திரமே என்பதை நீங்கள் எப்போது உணரப்போகிறீர்கள்? பொற்கொல்லர்கள் நகை செய்யும்போது அதிலிருந்து விழும் கண்ணுக்குத் தெரியாத துகள்களைக்கூட மீண்டும் பெருக்கியெடுத்து உருக்கி விடுவார்கள் என்பதை நீங்கள் அறிவீர்களா?  அப்புறம் எங்கே நேர்கிறது சேதாரம்? இனிமேலாவது விழிப்போடு இருங்கள்.0% முதல் 7%வரை சேதாரமும் ஏமாற்று வேலையே, 9.99% சேதாரமும் ஏமாற்று வேலையே...


இனி எந்த நகைக்கடைக்குச் சென்றாலும் ஏன் சேதாரம் கொடுக்க வேண்டும் என்று  கேள்வி கேளுங்கள்.உங்கள் வெறித்தனமான கேள்விகளால் விற்பனையாளரை விழிபிதுங்கச்செய்யுங்கள். அப்புறம் 916 நகை என்று கூறுவார்களே கேள்விப் பட்டிருக்கிறீர்களா? அதுவேறு ஒன்றும் இல்லை. சாதாரண 22 கேரட் தங்கத்தையே 916 நகை என்று கூறி செப்படி வித்தையெல்லாம் காட்டுகிறார்கள். அதாவது சுத்தமான தங்கத்தை 24 கேரட் என்று கூறுவது வழக்கம்.நகை செய்யும்போது 22 பங்கு தங்கமும் 2 பங்கு செம்பும் கலந்து செய்வதை அனைவரும் அறிவீர்கள் அல்லவா? 24 கேரட்டில் 22 பங்கை சதவீதம் ஆக்கிப்பாருங்கள், 91.6% வரும்.இந்த சாதாரண 22 கேரட் தங்கத்தையே 916 நகை அப்படி இப்படி என்று கதை விட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

  என்னதான் நான் புலம்பித்தீர்த்தாலும் பெண்களின் நகை மோகம் தீரும்வரை ,வரதட்சணை என்னும் கொடிய பேய் ஒழியும்வரை  இத்தகைய ஏமாற்று வேலைகள் தொடர்ந்து கொண்டுதானிருக்கும். அடுத்த பதிவில் மீண்டும் சந்திப்போம்


Wednesday 27 March 2013

ஆன்ட்ராய்டு மொபைல் வாங்கப்போறிங்களா...?

  • இப்பதிவு புதிதாக ஆன்ட்ராய்டு மொபைல் வாங்க விரும்புபவர்களுக்கு மட்டும்...ஆன்ட்ராய்டு ஃபோன் பயனுள்ளதா ? என்றால் ,நிச்சயமாக பயனுள்ளதே. ..மிக முக்கியமான ஒருசில பயன்களை மட்டும் பட்டியலிடுகிறேன்.
  • ஆன்ட்ராய்டு போனில் இருக்கும் GOOGLE PLAY   உதவியுடன் நீங்கள் பல்வேறு அப்ளிகேஷன்களை இலவசமாக டவுன்லோடு செய்து கொள்ளலாம்.
  • சாதாரண மொபைல் தமிழ் எழுத்துருக்களை சப்போர்ட் செய்யாது.ஆனால் ஆன்ட்ராய்டு மொபைலில் தமிழ் -ஆங்கிலம்,ஆங்கிலம்-தமிழ் அகராதி உதவியுடன் எல்லா சொற்களுக்கும் பொருள் காணமுடியும்.
  • HDFC,ICICI,STATE BANK ஆகியவற்றில் அக்கவுண்ட் வைத்திருப்பவர்கள் அந்தந்த வங்கி அப்ளிகேஷன்கள் உதவியுடன் மொபைல் பேங்கிங் வசதியைப்பெற முடியும்.
  • GPS என்னும் வசதியுடன் உலகின் எந்த மூலைக்கும் வழியைப்பார்த்துக்கொண்டே செல்ல முடியும்.
  • 5000 ரூபாய் இருந்தால் இப்பொழுது ஆன்ட்ராய்டு மொபைல் வாங்க முடியும்.
  • பல இலவச கேம்களை டவுன்லோடு செய்து விளையாட முடியும்.
  • மேலும் பல பயன்களை அடுத்த பதிவில் தொடர்கிறேன்....

Saturday 23 March 2013

எதிர்நீச்சல் mp3 பாடல்கள் இலவச டவுன்லோடு

பயணக்கட்டுரை-கோயம்புத்தூர் பயணம்

பயணங்கள் நம் வாழ்க்கையில் பல மாற்றங்களை ஏற்படுத்தும்.சில பயணங்கள் வாழ்க்கைப்பாதையையே கூட மாற்றிவிடும்.கோயம்பத்தூர் பயணம் எனக்கும் நிறைய படிப்பினையைத்தந்தது. நான்கு முறை என் நண்பன் புண்ணியமூர்த்தியுடன் பைக்கில் கோவை சென்றிருக்கிறேன். எனக்கு கோவை பிடித்துப்போனதற்கு பல காரணங்கள் உண்டு.பெரிய நகரமும் இருக்கும்,ஆனால் ஒரு அமைதியும் இருக்கும். அனைத்து மனிதர்களிடமும் மனிதாபிமானம் இருக்கும். நகர வாழ்க்கை வாழ்ந்தாலும் அங்கே தமிழ் கலாச்சாரம் இருக்கும். வீட்டு வாசலில் சாணமிடுவது, பெண்கள் கழுத்தில் தாலிக்கயிறு அணிவது அங்கே நகரத்திலும் மேல்குடி மக்களிடமும் காணமுடியும்.நம் புதுச்சேரியில் கிராமங்களில்  கூட இவற்றைக் காணமுடிவதில்லை. கோவையைச்சுற்றிலும் உள்ள மருதமலை,பொள்ளாச்சி, சிறுவாணி, ஆழியாறு,திருமூர்த்தி அருவி,ஈஷா யோகா மையம் ஆகியவை என்னை மிகவும் கவர்ந்த இடங்கள்.நானும் என் நண்பனும் எப்பொழுதும் இரவில்தான் பயணத்தைத் தொடங்குவோம்.வழியில் கோவில் ,பள்ளி போன்ற இடங்களில் எங்காவது உறங்குவோம். எங்கு வேண்டுமானாலும் குளிப்போம். இயற்கையை ரசிப்போம். நீங்களும் ஒருமுறை கோவை சென்று பாருங்கள். மனிதாபிமானமுள்ள மனிதத்தைக் காண்பீர்கள். இன்னும் நிறைய பேச ஆசை. வார்த்தைகள் கிடைக்கவில்லை.அடுத்த பதிவில் தொடர்கிறேன்.நன்றி.

இருசக்கர வாகனம் வாங்க முன்பணம் (MCA) பெற விண்ணப்பம்

Monday 18 March 2013

ஈட்டிய விடுப்பு விண்ணப்பம்(EL) PDF வடிவில்

TNPSC AND TET முக்கிய பாடக்குறிப்புகள்

TNPSC  மற்றும் TET தேர்வுகளுக்கான அனைத்து பாடங்களுக்கும் தேவையான முக்கிய பாடக்குறிப்புகள் அடங்கிய ஒரு தளத்தைக் கண்டேன்.அதை உங்களுடன் பகிர்வதில் மகிழ்ச்சியடைகிறேன். tntet2012.blogspot.com  என்ற அத்தளத்தில் தமிழ், ஆங்கிலம்,கல்வி உளவியல் என எல்லாம் டவுன்லோடு செய்ய சொடுக்கவும்

Saturday 16 March 2013

தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு உதவும் ஒரு வலைத்தளம்

அனைவருக்கும் வணக்கம்.நானே முதலில் எழுதும் பதிவு இது.தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு மிகவும் பயன்படும் ஒரு வலைத்தளத்தை அறிமுகம் செய்வதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.
நூலகம் என்னும் வலைத்தளமே அது.முன்தொடக்கப்பள்ளி குழந்தைகள் முதல் ஐந்தாம் வகுப்பு மாணவர்கள் வரை அனைவருக்கும் தேவையான 
பாடங்கள் ,காட்சி அட்டைகள்,காட்சிப்பாடல்கள்,வண்ணப்பக்கங்கள் அனைத்தும் இத்தளத்தில் கிடைக்கும்.தளத்திற்குச் செல்ல இங்கே சொடுக்கவும்.CLICK.என்னுடைய முதல் பதிவைப்பற்றிய உங்கள் கருத்துகளை எதிர்பார்க்கிறேன்.நன்றி.