புத்தாண்டை எண்ணி புலகாங்கிதம் அடையமுடியவில்லை... புதுவசந்தம் வந்ததென்று புன்முறுவல் பூப்பதில்லை..
புத்தகச் சுமையில்லா பள்ளி என்று வருமோ,
புகையில்லாத காற்று என்று இருக்குமோ,
போதையில்லா சமூகம் என்று தோன்றுமோ,
புழுதி இல்லாத சாலைகள் உருவாகுமோ,
புரிதலுடன் குடும்பங்கள் என்று இணையுமோ,
புதுமைகளைப் படைக்க இளைஞர்கள் என்று புறப்படுவார்களோ,
பொதுவுடைமைக்காக புரட்சிகள் உதயமாகுமோ,
பூசல் இல்லாமல் மாநிலங்கள் ஆகுமோ,
பூரணமான புத்தாண்டு அன்றுதான் என் தேசத்திற்கு...
இருந்தாலும் என்றாவது ஒருநாள் என் தேசம் முன்னேறிவிடும் என்று வாழும் நேர்மறை மனிதர்களுக்காக என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்..
புத்தகச் சுமையில்லா பள்ளி என்று வருமோ,
புகையில்லாத காற்று என்று இருக்குமோ,
போதையில்லா சமூகம் என்று தோன்றுமோ,
புழுதி இல்லாத சாலைகள் உருவாகுமோ,
புரிதலுடன் குடும்பங்கள் என்று இணையுமோ,
புதுமைகளைப் படைக்க இளைஞர்கள் என்று புறப்படுவார்களோ,
பொதுவுடைமைக்காக புரட்சிகள் உதயமாகுமோ,
பூசல் இல்லாமல் மாநிலங்கள் ஆகுமோ,
பூரணமான புத்தாண்டு அன்றுதான் என் தேசத்திற்கு...
இருந்தாலும் என்றாவது ஒருநாள் என் தேசம் முன்னேறிவிடும் என்று வாழும் நேர்மறை மனிதர்களுக்காக என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்..