tag:blogger.com,1999:blog-30403176980000281962024-02-19T11:21:18.954+05:30கல்லாதது உலகளவுKONJAM GK KONJAM JOLLYகலியபெருமாள் புதுச்சேரிhttp://www.blogger.com/profile/09348935882490903193noreply@blogger.comBlogger80125tag:blogger.com,1999:blog-3040317698000028196.post-70176358496687816692019-11-20T22:03:00.001+05:302019-11-20T22:03:50.887+05:30லிஃப்ட் கொடுப்பதில்தான் எத்தனை வகை!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
எவ்வளவு வாகனங்கள் பெருகிப்போனாலும் எவ்வளவு பேருந்துகள் நிரம்பி வழிந்தாலும் அடுத்தவர் பைக்கில் ஓசியில் ஈசியாக லிஃப்ட் கேட்டுச் செல்பவர்களும் பலர் இருக்கத்தான் செய்கிறார்கள்..அதில் பல நேரங்களில் பலவிதமான மனிதர்களைப் பார்க்க நேரிடும் ..அவர்களைப் பற்றியும் ஒரு பதிவு எழுதிவைப்போமே..(எவ்ளோ நாள்தான் சீரியசா எழுதறது ,வேற என்ன எழுதறதுனு தெரியல ..)<br />
<br />
நம்ம சுத்தம் சுந்தரராஜன மாதிரி ஒரு குரூப் இருக்காங்க..ரொம்ப பாவமா லிஃப்ட் கேப்பாங்க..<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiwjtXLfXq7CgaMYrzvytWeaRX55lHX0VL1YcBcxV5GOhbOJJZ8jtSsEW5WLYoTfzJIw32Xci3oNQ5SQV1jsCx5DOnAs8qUhGO5Z_S11cItkB0yyARlitGIPk19l_AxYVjBdIJKDUyY7BSb/s1600/is-it-really-illegal-to-give-lift-to-a-stranger-in-india-heres-a-fact-check.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="480" data-original-width="640" height="240" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiwjtXLfXq7CgaMYrzvytWeaRX55lHX0VL1YcBcxV5GOhbOJJZ8jtSsEW5WLYoTfzJIw32Xci3oNQ5SQV1jsCx5DOnAs8qUhGO5Z_S11cItkB0yyARlitGIPk19l_AxYVjBdIJKDUyY7BSb/s320/is-it-really-illegal-to-give-lift-to-a-stranger-in-india-heres-a-fact-check.jpg" width="320" /></a></div>
கடைசியில சாராயக்கடை வாசல்ல நிறுத்தச் சொல்வாங்க..அட பண்ணாட இதுக்காடா இவ்ளோ பொறுப்பா லிஃப்ட் கேட்டனு தோணும்..<br />
என்னதான் பெண்கள் வாகனம் அதிகமாக ஓட்டத் தொடங்கிவிட்டாலும் பெண்களிடம் பெண்களே லிஃப்ட் கேட்பதில்லை..அவ்ளோ நம்பிக்கை...ஆண்களிடம் தைரியமாக லிஃப்ட் கேட்டுச் செல்வார்கள்..<br />
<br />
தாய்க்குலங்களுக்கு மட்டுமே தாராளமாக லிஃப்ட் கொடுக்கும் உயர்ந்த மனம் கொண்ட பல உத்தமர்களும் உண்டு..<br />
<br />
என் மனைவியைத் தவிர இந்த சீட்டு யாருக்கும் கிடையாதுன சொல்ற ஒன்னு ரெண்டு பேரும் இருக்காங்க..<br />
பள்ளி மாணவர்கள் பலர் வீட்டில் பேருந்துக்கு கொடுக்கும் காசையெல்லாம் வாங்கி சாப்டுட்டு இளிச்சவாயன் எவனாச்சும் கெடைச்சா லிஃப்ட் கேட்டு போறவங்களும் இருக்காங்க..சுயமரியாதையோடு யாரிடமும் கேட்காமல் செல்லும் அரசுப்பள்ளி மாணவர்களும் பலர் இருக்கிறார்கள்..அத்தகைய மாணவர்களைப் பல நேரங்களில் தினமும் ஏற்றிச்சென்றிருக்கிறேன் நானும்..சிலர் வண்டியை நிறுத்தறியா இல்லியா என்று நடுரோட்டில் நின்றுகொண்டு லிஃப்ட் கேட்பவர்களும் உண்டு..<br />
எனக்குத் தெரிந்த ஆசிரிய நண்பர் அண்ணன் சுவாமிநாதன் ஒருமுறை ஒரு அம்மாவை பைக்கில் ஏற்றிச் சென்றிருக்கிறார்..வழியில் Speed breakல் ஏறி இறங்கும்போது அந்த அம்மா கீழே விழுந்து அவரை மருத்துவமனையில் சேர்த்ததாகவும்,அதிலிருந்து யாருக்கும் லிஃப்டே கொடுப்பதில்லை என்று கூறுவார்..பாவப்பட்டு லிஃப்ட் கொடுத்துத் தன் பணத்தைப் பறிகொடுத்தவர்களும் இருக்கிறார்கள்.<br />
<br />
அது எல்லாம் இருக்கட்டும் உங்க வாழ்க்கை என்ற வண்டியில் கடைசிவரை வரப்போகும் மனைவியை ஏற்றும் முன் நல்லா யோசிச்சு ஏத்துங்க..பாதி வழியில இறக்கிவிட முடியாதில்ல..(மெசேஜ் சொல்லியாச்சு)<br />
<br />
நீங்க யாருக்கெல்லாம் லிஃப்ட் கொடுத்திருக்கீங்க..கமெண்டுல சொல்லிடுங்க..உங்கள் கலியபெருமாள்.</div>
கலியபெருமாள் புதுச்சேரிhttp://www.blogger.com/profile/09348935882490903193noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-3040317698000028196.post-1106780238949232162018-09-15T22:24:00.000+05:302018-09-15T22:34:34.373+05:30என்று தணியும் இந்த குடிபோதை மோகம்?<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
பாரதியும் அரவிந்தரும்<br />
வாழ்ந்திட்ட பூமி<br />
பாழான மதுவாலே<br />
அழியுதடா சாமி..<br />
அளவற்ற குடியாலே<br />
சாகுதொரு சமுதாயம்.<br />
அதில்தானே அரசாங்கம்<br />
தேடுதிங்கு ஆதாயம்.<br />
ஏழையின் பலவீனம்<br />
ஏமாற்றும் மதுபானம்.<br />
அரசுக்கு வருமானம்<br />
அதுவன்றோ அவமானம்.!<br />
மலிவுவிலையில் ஊருக்கு<br />
ஒன்பது மதுக்கடை<br />
மயக்கத்திலே மனிதன்<br />
சாய்வதோ சாக்கடை.<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh7nDybp00JmSoXFrsHiwmGECKfyZrEVI5Rq0Y49-h88tmrRcdUaxQ6r3KlhwTcCRTHjRmFbNjIR-Y8tbmkZ-iaoJWwPUaVF67cR91qWiHmCkSCWxlCz6pWZXmoIszOTMGbUWXG1NGip-kw/s1600/201806250121596123_4-dead-people-in-tasmasc-stores_SECVPF.gif" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="542" data-original-width="794" height="218" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh7nDybp00JmSoXFrsHiwmGECKfyZrEVI5Rq0Y49-h88tmrRcdUaxQ6r3KlhwTcCRTHjRmFbNjIR-Y8tbmkZ-iaoJWwPUaVF67cR91qWiHmCkSCWxlCz6pWZXmoIszOTMGbUWXG1NGip-kw/s320/201806250121596123_4-dead-people-in-tasmasc-stores_SECVPF.gif" width="320" /></a></div>
<br />
அவ்வைப்பாட்டி வரிகளை<br />
அர்த்தமாக ஆக்கினான்<br />
ஊக்க மதுகைவிடேல்<br />
உவகையோடு சொல்கிறான்.<br />
குடிப்பதற்குக் காரணம்<br />
தேடுகிறான் தினம்தினம்<br />
குடல்வெந்து போனபின்னே<br />
ஆகிறானே நடைபிணம்.<br />
மாணவரும் குடிக்கின்றார்<br />
மங்கையரும் குடிக்கின்றார்.<br />
வானத்திலே பறக்கின்றார்<br />
மானமின்றி கிடக்கின்றார்..<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh4FcMVRKqnWvF93aZyblPqa6k7AG6ijdIoCp8wzMpgJpvjZdvJWWLRD1an3AVeTSvVqtDTDc4Va9W0_63qppKwoAfjQTwE5tuVAF7bqTmfo8Wyr4jifwdTTHL4_JXjRcj73qdtqn-JQ-Fj/s1600/Jan9%252BMalar12%252BCH.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="629" data-original-width="938" height="214" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh4FcMVRKqnWvF93aZyblPqa6k7AG6ijdIoCp8wzMpgJpvjZdvJWWLRD1an3AVeTSvVqtDTDc4Va9W0_63qppKwoAfjQTwE5tuVAF7bqTmfo8Wyr4jifwdTTHL4_JXjRcj73qdtqn-JQ-Fj/s320/Jan9%252BMalar12%252BCH.jpg" width="320" /></a></div>
<br />
மதுவிலக்கை ஓரங்கட்டி<br />
மகாத்மாவைப் போற்றுகிறோம்<br />
காந்திஜெயந் தியில்மட்டும்<br />
கடைகளை மூடிக்கிறோம்.<br />
<br />
கள்ளுண்ணாமை அதிகாரத்தைக்<br />
காலில்போட்டு மிதித்துவிட்டு<br />
திருவள்ளுவர் தினத்திலே<br />
திறப்பதில்லை கள்ளுக்கடை.<br />
<br />
ஆட்சிகள் மாறுமோ?<br />
அதிகாரம் மாறுமோ?<br />
மதுவிலக்கு வருமோ?<br />
மனநிம்மதி தருமோ?<br />
பகல்கனவாய் பாதியிலே<br />
கலைந்தேதான் சென்றிடுமோ?<br />
<br />
இலக்கணப் பிழையின்றி<br />
எழுதினேனா தெரியவில்லை.<br />
இதயத்துக் கோபமோ<br />
இன்னமும் தீரவில்லை..<br />
<br />
அடுத்த பதிவில் தொடரும்வரை உங்கள் கலியபெருமாள்.<br />
<br />
<br /></div>
கலியபெருமாள் புதுச்சேரிhttp://www.blogger.com/profile/09348935882490903193noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-3040317698000028196.post-59752885823855498442018-05-04T19:09:00.002+05:302018-05-04T19:09:14.442+05:30இந்திய மாநிலங்களும் தலைநகரங்களும் என் மகளின் குரலில்.<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<iframe width="320" height="266" class="YOUTUBE-iframe-video" data-thumbnail-src="https://i.ytimg.com/vi/sGW68O35W1I/0.jpg" src="https://www.youtube.com/embed/sGW68O35W1I?feature=player_embedded" frameborder="0" allowfullscreen></iframe></div>
<br /></div>
கலியபெருமாள் புதுச்சேரிhttp://www.blogger.com/profile/09348935882490903193noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3040317698000028196.post-69912117357823955242018-04-24T22:12:00.001+05:302018-04-24T22:12:48.910+05:30ஜனங்களை வென்ற ஜானகியின் பாடல்கள்.<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
இசைப்பதிவு எழுதி ரொம்ப நாளாச்சு..தேர்வு விடுமுறை விட்டாச்சு..அதான் பதிவுலகம் பக்கம் தலைகாட்டத் தொடங்கியிருக்கிறேன்..கொஞ்சம் பொறுத்துக்கொள்ளுங்கள்..<br />
நேற்று (ஏப்ரல் 23) இசைக்குயில் ஜானகி அம்மாவின் எண்பதாவது பிறந்தநாள்..நேற்றைக்கே இப்பதிவை எழுத நினைத்தேன்..கொஞ்சம் வேலையால் முடியவில்லை..<br />
<br />
நெடுந்தூரப் பயணங்களை நிமிடங்களில் முடித்துவைக்க நெஞ்சிற்கினிய பாடல்களால்தான் முடியும்..அப்படி ஒரு அருமையான குரலுக்கு சொந்தக்காரர்தான் ஜானகி அம்மாள்..அவருடைய ஆயிரக்கணக்கான பாடல்களில் சிறந்த பத்து பாடல்களை மட்டும் இங்கே வரிசைப்படுத்தியுள்ளேன்..நீங்களும் ரசித்து மகிழுங்கள்..<br />
<br />
1. பாடல்: சின்னத்தாயவள்<br />
படம்: தளபதி .<br />
இளையராஜாவின் இசையில் வித்தகக்கவிஞர் வாலி எழுதிய அருமையான பாடல்..நிச்சயம் இந்தப் பாடலைப் பிடிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது..மணிரத்னம் படம் என்றாலே பாடல்கள் ஸ்பெஷல்தான்..அதிலும் இப்பாடல் ஜானகியின் காந்தக்குரலில் கவனம் ஈர்க்கும் ரகம்..<br />
<br />
2.படம்: மௌனராகம்.<br />
பாடல்: சின்னச்சின்ன வண்ணக்குயில்<br />
<br />
மணிரத்னம், இளையராஜா இணையில் மற்றுமொரு அருமையான படம்.. ன,ண,ல,ள உச்சரிப்பு இப்பாடலில் அதிகம் வரும்..தமிழ் சினிமாவில் தவறில்லாமல் தமிழை உச்சரிக்கத் தெரிந்தவர்கள் சிலரே..மன்னவன் பேரைச்சொல்லி மல்லிகை சூடிக் கொண்டேன் என்ற வரிகளை அருமையாகப் பாடியிருப்பார்..<br />
<br />
3.படம்: தேவர் மகன்.<br />
பாடல்: இஞ்சி இடுப்பழகா<br />
<br />
உலகநாயகன் கமலின் படம்..இசையுலகின் நவரச நாயகி என்று கூறுமளவுக்கு அனைத்து உணர்வுகளையும் அழகாய் வெளிப்படுத்துவதில் அவருக்கு நிகர் அவரே..<br />
ரேவதி பாடுவது போலவே இருக்கும் கேட்கும்போது..<br />
<br />
4. படம்: சங்கமம்.<br />
பாடல்: மார்கழித் திங்களல்லவா?<br />
பெரிய நடிகர்கள் இல்லாமல் மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற படம். இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையில் அமைந்த அழகிய பாடல்..என்ன ஒரு குரல்..இசைக்குயில் பட்டம் பொருத்தமானதுதான்..<br />
<br />
5.வைதேகி காத்திருந்தாள்.<br />
பாடல்: அழகு மயில் ஆட..<br />
<br />
மீண்டும் ஒரு நாட்டியப்பாடல் நம்ம இசைஞானியின் இசையில்..இளம் வயதில் கணவனை இழந்த ஒரு கைம்பெண்ணின் உணர்வுகளை ஒவ்வொரு வார்த்தையிலும் வடித்திருப்பார்..இசையை ரசிக்க பெரிய அறிவெல்லாம் தேவையில்லை என்று உணர்த்தும் பாடல்..<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgi5Wt0Ya32DnhLsGsBDXLzKNf-mTjFa34AVWC97UhRIVTdAk_z1465aGXOtD1pyGsLkUoz5v4APmzy8WXlSel1V4emIRJGZ5pXx_GcJeyVpDNWsDXwMfMjMRmq2Aa9v3l9hxPeDL-AMemZ/s1600/1200px-S_Janaki_in_Pune%252C_India_2007.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="1244" data-original-width="1200" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgi5Wt0Ya32DnhLsGsBDXLzKNf-mTjFa34AVWC97UhRIVTdAk_z1465aGXOtD1pyGsLkUoz5v4APmzy8WXlSel1V4emIRJGZ5pXx_GcJeyVpDNWsDXwMfMjMRmq2Aa9v3l9hxPeDL-AMemZ/s320/1200px-S_Janaki_in_Pune%252C_India_2007.JPG" width="308" /></a></div>
<br />
6.படம்: ஜானி<br />
பாடல்: காற்றில் எந்தன் கீதம்<br />
எதார்த்த இயக்குனர் மகேந்திரனின் படம்..இளையராஜாவின் இசை பிடித்தவர்களுக்கு நிச்சயம் ஜானகி அம்மாவையும் பிடிக்கும்..நான் ,என் நண்பன் புண்ணியமூர்த்தியோடு கிரிவலம் சென்று வரும்போது இது போன்ற பாடலைத்தான் கேட்டு வருவோம்..களைப்பும் தெரியாது கால்வலியும் தெரியாது..<br />
<br />
7. படம்: பதினாறு வயதினிலே..<br />
பாடல்: செந்தூரப்பூவே<br />
<br />
இயக்குனர் இமயம் பாரதிராஜா படம்..சமீபத்தில் மறைந்த SRIDEVI யின் படம்..பருவப்பெண்ணின் ஏக்கங்களை பதினாறு வயதுப்பெண்ணாகவே பாடியிருப்பார்..இசையின் மூலக்கூறுகளை ஆராயும் அளவுக்கு விஞ்ஞானம் தெரியாது எனக்கு..ஆனால் மனக்காயங்களுக்கு பல நேரங்களில் மருந்தாவது இந்த இசையே..<br />
<br />
8.படம்: கர்ணா.<br />
பாடல்: மலரே மௌனமா..<br />
இசையமைப்பாளர் வித்யாசாகரின் இசையில் அமைந்த பாடல்..அவருடைய சிறந்த ஐந்து பாடல் எடுத்தாலே நிச்சயம் இப்பாடலும் இடம்பெறும்..SPB சாரும் ஜானகியும் போட்டி போட்டுக்கொண்டு பாடிய ஒரு பாடல்..<br />
<br />
<br />
9. மெல்லத்திறந்தது கதவு<br />
பாடல்: ஊருசனம் தூங்கிடுச்சு.<br />
<br />
மெல்லிசை மன்னரும், இசைஞானியும் சேர்ந்து இசையமைத்த படம்..மோகன் படம் என்றாலே பாடல்கள் அருமையாகத்தான் இருக்கும்..ஆயிரம்முறை கேட்டாலும் சலிக்காத ஒரு பாடல்..கன்னிப்பொண்ணு நானே..என் மாமனே..என் மாமனே என்ற வரிகள் போதும் அவருடைய திறமைக்கு..<br />
<br />
10. படம்: உயிரே<br />
பாடல்: நெஞ்சினிலே<br />
<br />
ஜானகி பாடல் என்று கூறிவிட்டு ROMANTIC பாடல் இல்லாமல் எப்படி?<br />
ரொமான்ஸ் பாடல்கள் பாடல்கள் பாடுவதில் அவருக்கு நிகராக இன்னும் பிறக்கவில்லை என்றே கூறலாம்..ஏ.ஆர்.ரகுமானின் இசையில் காதலைக் கரைத்து ஊற்றிய ஒரு பாடல்..நெஞ்சினிலே ஊஞ்சலே என்று பாடும்போது நாமும் கொஞ்சம் ஆடித்தான் போவோம்..<br />
<br />
ஆயிரக்கணக்கான பாடல்களில் இவைதான் சிறந்தவை என்று அர்த்தமில்லை..என் மனதைவிட்டு நீங்காத சிலவற்றை மட்டுமே எழுதியுள்ளேன்..முடிந்தால் நீங்களும் கேட்டு மகிழுங்கள்..இந்த வாரத்தில் பிறந்தநாள் கொண்டாடும் நண்பர்களுக்கு இப்பதிவைச் சமர்ப்பிக்கிறேன்..நன்றியுடன் உங்கள் கலியபெருமாள்..<br />
<br /></div>
கலியபெருமாள் புதுச்சேரிhttp://www.blogger.com/profile/09348935882490903193noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3040317698000028196.post-54932455594811814912018-03-03T21:50:00.001+05:302018-03-04T08:35:16.299+05:30கடன் அட்டை ( credit card ) வரமா? சாபமா? <div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
கடன் அட்டை பயன்படுத்துபவர்களுக்காக அல்ல இப்பதிவு..அதைப்பற்றி அறிமுகம் இல்லாதவர்களுக்கு இப்பதிவு உதவும் என்று நினைக்கிறேன்.. கடன்பட்டார் நெஞ்சம்போல கலங்கினான் இலங்கை வேந்தன் என்று புராணங்களிலே எழுதப்பட்டது..நம் இந்தியாவைப் பொறுத்தவரை வங்கியில் கடன் வாங்கி ஏமாற்றும் கோடீஸ்வரர்கள் நிறையபேர் இருந்தாலும் கடன் அட்டையைப் பயன்படுத்துபவர்கள் இங்கே மிகவும் குறைவுதான்..<br />
<br />
உலக அளவில் அதிகமான கிரெடிட் கார்டு பயன்படுத்தும் நாடு அமெரிக்காதான்..அமெரிக்காவில் ஒருவரே 20,, 30 கடன் அட்டை கூட வைத்திருப்பார்களாம்..2018 பிறந்த பிறகும் கூட நம் நாட்டில் வெறும் 3 கோடி பேர் மட்டுமே கிரடிட் கார்டு பயன்படுத்துகிறார்கள்..நம் மக்கள் தொகையில் 5 சதவீதம் பேர் கூட இல்லை..<br />
<br />
இதை நல்லதா ,கெட்டதா என்று சொல்லமுடியவில்லை..ஏனெனில் உண்மையில் யாருமே கடன் வாங்காமல் வாழ்கிறார்களா என்றால் இல்லை என்றுதான் கூறமுடியும்..இந்தியாவில் மக்கள் கொஞ்சம் முன்னெச்சரிக்கையானவர்கள் என்பது எல்லோரும் அறிந்ததே..<br />
<br />
கிரடிட் கார்டைப் பற்றி சொன்னாலே நம்மில் பலரும் தூரமாய் ஓடுகிறார்கள்..அநியாயமாக வட்டி போட்டு வாங்குவார்கள்; தேவையற்ற பிரச்சனை வரும் என்று நினைக்கிறார்கள்..ஆனால் உண்மை அதுவல்ல..உண்மையில் சரியான செலவுக்கு சரியான நேரத்தில் பயன்படுத்தி சரியான நேரத்தில் சரியாக திருப்பிச் செலுத்திவிட்டால் எந்தப் பிரச்சனையும் இல்லை..குறிப்பிட்ட தேதிக்குள் செலுத்தத் தவறினால்தான் வட்டியோடு செலுத்த வேண்டியிருக்கும்..<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhJxZlw0W-28ZShbzaAwlW8hUGtTf8vJkmDpvE7scMT_opPkHj9I0hiBik1WNsh46GIyj879Hky5P_fuYuPCrVmgkBOfEtyga_TUoe0VjVv4GzqEv57Ss01_l_fay1xCLxI4KEE8M8oOQzt/s1600/download.jpeg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="178" data-original-width="282" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhJxZlw0W-28ZShbzaAwlW8hUGtTf8vJkmDpvE7scMT_opPkHj9I0hiBik1WNsh46GIyj879Hky5P_fuYuPCrVmgkBOfEtyga_TUoe0VjVv4GzqEv57Ss01_l_fay1xCLxI4KEE8M8oOQzt/s1600/download.jpeg" /></a></div>
<br />
கிரடிட் கார்டு பற்றி ஒரு சில விஷயங்கள் மற்றும் தெரிந்துகொண்டால் போதும்..உங்களுக்கு கொடுக்கப்பட்ட அதிகபட்ச தொகைக்கு எந்தப் பொருள் வேண்டுமானாலும் நம் அவசரத் தேவைக்கு வாங்கிக் கொள்ளலாம்..குறிப்பிட்ட தவணைத் தேதிக்குள் திருப்பிச் செலுத்திவிட்டால் ஒரு பைசா வட்டி கூட இல்லை..<br />
<br />
இன்றைய அவசர வாழ்க்கையில் அவசரத்தேவைக்கு எவன் ஒரு பைசா வட்டியில்லாமல் கடன் கொடுக்கிறான்..வாங்குவதில் இருக்கும் பொறுப்பு திருப்பிச் செலுத்துவதிலும் இருந்தால் எந்தப் பிரச்சனையும் இல்லை..<br />
<br />
கடன் அட்டையில் இருக்கும் ஒரே பிரச்சனை திருப்பிச் செலுத்தும்போது வங்கியில் சென்று challan மூலம் செலுத்தினால் அதற்கு ஒரு 100 ரூபாய் charge போடுவார்கள்..அது ஒன்றுதான் பிரச்சனை..PAYMENT காசோலை மூலமாகவோ internet banking மூலமாகவோதான் செலுத்த வேண்டும்..<br />
<br />
கிரடிட் கார்டு பயன்படுத்தி ஏமாற்றுபவர்களின் பட்டியலில் இந்தியா உலகில் மூன்றாம் இடத்தில் உள்ளது. இந்த நிலை மாறினால் கிரடிட் கார்டு பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை நிச்சயம் உயரும்..அவர்களால்தான் மற்றவர்கள் பயப்படுகிறார்கள்..நேர்மையாக இருப்பவர்கள் நிச்சயமாய் பயப்படத் தேவையில்லை கிரடிட் கார்டைப் பார்த்து..மறைமுகக் கட்டணமெல்லாம் எதுவுமில்லை.<br />
<br />
இன்று பல வீட்டு சுபநிகழ்ச்சிகளின் அவசர செலவுக்கு ஆபத்தில் உதவுவது கிரடிட் கார்டு என்றால் மிகையில்லை..<br />
<br />
கிரடிட் கார்டு இருக்கிறது என்பதற்காக தேவையே இல்லாமல் கண்ட பொருளையும் வாங்கிக்குவித்தால் நிச்சயமாய் கிரடிட் கார்டு சாபமே..அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சுதானே..<br />
<br />
தேவைக்கேற்ப அளவோடு பயன்படுத்தினால் கிரடிட் கார்டு வரமே..வாங்க நினைப்பவர்கள் தைரியமாக வாங்குங்கள்..கடன் வாங்கி வாழ விரும்பாதவர்களுக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை..சந்தேகம் இருந்தால் விளக்கத் தயாராய் உங்கள் கலியபெருமாள்..</div>
கலியபெருமாள் புதுச்சேரிhttp://www.blogger.com/profile/09348935882490903193noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-3040317698000028196.post-63245001650653522082018-02-24T23:41:00.001+05:302018-02-25T05:04:47.276+05:30கருப்பாய் பிறந்தவர்களுக்கும் கொஞ்சம் கரிசனம் காட்டுங்கள்.<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
வெள்ளை நிறத்தொரு பூனை எங்கள் வீட்டில் வளருது கண்டீர்... எந்த நிறமிருந்தாலும் அவை யாவும் ஒரே தரமன்றோ? என்று பாட்டுக்கொரு புலவன் பாரதி எழுதிவிட்டுச் சென்றுவிட்டார்..ஆனால் இன்னமும் இங்கே நிறத்தை வைத்துத்தான் பல இடங்களில் தரம் நிர்ணயிக்கப்படுகிறது..<br />
<br />
இது ஏதோ இன்று நேற்று வந்த பிரச்சனையாக இல்லை..என் தேசத்தில் மட்டுமல்ல இது ஒரு சர்வதேச பிரச்சனை..<br />
<br />
கல்வி மட்டும் போதாது போல இங்கே கலரும்தான் ஒரு மனிதனின் வாழ்க்கையை நிர்ணயிக்கிறது..விலங்குகளும் இதற்கு விதிவிலக்கல்ல போல..பசுமாட்டைத்தானே எல்லோரும் பக்தியோடு வழிபடுகிறோம்..கருப்பாய் இருக்கும் எருமைமாட்டை என்னவோ எம வாகனமாகத்தானே சொல்லிவைத்திருக்கிறார்கள்..நாட்டில்தான் இந்நிலை என்றால் காட்டிலும் இதே கதிதான் போல..சிவப்பாய் இருக்கும் சிங்கத்திற்குத்தான் காட்டரசன் பதவி..கம்பீரமாய் இருந்தாலும் கருப்பாய் போனதால் யானைக்கு அடுத்த இடம்தான்..<br />
<br />
ரஜினியின் சிவாஜி படத்தில் ஒரு காட்சி வரும் ..அங்கவை சங்கவை நகைச்சுவைக் காட்சி..பார்ப்பதற்கு காமெடியாக இருந்தாலும் கருப்பாய் பிறந்த பெண்களின் மனவலியை ஏன் சூப்பர்ஸ்டார் உணராமல் போனார் என்று தெரியவில்லை..பல சினிமாக்களில் பார்த்திருக்கிறேன்..இந்தியாவில் கருப்பான பெண்களே இல்லாதது போல கருப்பான வேடத்திற்குக் கூட செக்கச்செவேல் என்றிருக்கும் நடிகைகள்தான் தேவைப்படுகிறார்கள்..பாலாவின் பரதேசி படத்தில் கூட மைதாமாவு போலிருக்கும் வேதிகாவிற்கு கரிபூசி நடிக்க வைத்திருப்பார்..<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEinhcgvcGQtNI1pJhprGb7_VEsvBYsLB2gTAyyRk_m4Rg931jynIH02zQrGV2b7ID4tMoRx1AzGrUjXYaex510HeGd4pynjc6ELrMFnIbn_rwKzQDnbLApKGWrGj9Yxh4lN4dKOhNbfqeWy/s1600/unnamed.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="321" data-original-width="458" height="224" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEinhcgvcGQtNI1pJhprGb7_VEsvBYsLB2gTAyyRk_m4Rg931jynIH02zQrGV2b7ID4tMoRx1AzGrUjXYaex510HeGd4pynjc6ELrMFnIbn_rwKzQDnbLApKGWrGj9Yxh4lN4dKOhNbfqeWy/s320/unnamed.jpg" width="320" /></a></div>
<br />
இந்தியாவைப் பொறுத்தவரை சிவப்பானவர்களே சிறந்தவர்கள்,திறமைசாலிகள்..கருப்பாய் பிறந்தவர்கள் எல்லாம் களவாணிகள்,அறிவற்றவர்கள்..இது பொதுவான கண்ணோட்டம் என்றுதான் கூறுகிறேன்..எல்லோரும் அப்படி எல்லா நேரத்திலும் நினைத்திருந்தால் தமிழ்நாட்டிற்கு ஒரு கர்மவீரர் கிடைத்திருக்க மாட்டார்..<br />
<br />
இந்த நிறவேறுபாட்டால் கருப்பாய் பிறந்தவர்களுக்கு ஏற்படும் மன உளைச்சல் பற்றியும் .தாழ்வு மனப்பான்மையால் அவர்களுக்கு ஏற்படும் இழப்புகளைப் பற்றிதான் இப்பதிவில் எழுத நினைத்தேன்..<br />
<br />
நானே சிறுவயதில் நிறைய தாழ்வு மனப்பான்மையால் பாதிக்கப்பட்டிருக்கிறேன்..எனக்குக் கிடைத்த சில நல்ல ஆசிரியர்களின் ஊக்கத்தால் எப்படியோ நன்றாகப் படித்து ஒரு நல்ல அரசு வேலைக்கு வந்துவிட்டேன்..வேலைக்கு வந்தபிறகுகூட வாடகைக்கு வீடுகேட்டுச் சென்றால் வீட்டு ஓனர்கள் என்னைக் கொஞ்சம் சந்தேகக் கண்ணோடுதான் பார்ப்பார்கள் திருடனாய் இருப்பானோ என்று..<br />
<br />
நம்ம ஊர்ல ஒன்னு சொல்வாங்க..ஆம்பபுள்ள எப்படி இருந்தாலும் பரவாயில்ல.பொம்பளபுள்ளதான் கருப்பா பொறந்துட கூடாதுன்னு..அவர்களுக்கு என்ன ஆசையா கருப்பாகப் பிறக்க..என்னதான் சமூகம் முன்னேறினாலும் படித்தாலும் கருப்பாய் பிறந்த எத்தனையோ பெண்கள் இன்னும் நிறையபேர் முதிர்கன்னிகளாகத்தான் இருக்கிறார்கள்..காதலுக்குக் கண்ணில்லை என்பார்கள்..ஆனால் அதில்கூட சிவப்பாய் இருக்கும் பெண்களுக்குத்தான் முன்னுரிமை அளிக்கப்படுகிறது..கருப்பாய் இருப்பவர்களுக்குக் காத்திருப்போர் பட்டியலே நீள்கிறது.. கருப்பாய் பிறந்த பெண்களைக் கல்யாணம் செய்தால் கவர்மென்ட் வேலையில் முன்னுரிமை என்று கூறிப்பாருங்கள்..முதிர்கன்னிகளே யாரும் இருக்கமாட்டார்கள்..<br />
<br />
இந்த அவலமெல்லாம் ஒரே நாளில் மாறிவிடாது என்பதை நானும் அறிவேன்..எனக்கு நெருக்கமான ஒருவருக்கு இரண்டு மகன்கள்..சிவப்பாய் இருப்பவனை தவறே செய்தால்கூட தண்டிக்க மாட்டார்கள்..கருப்பாய் இருப்பவனையே எப்போதும் எல்லாவற்றுக்கும் திட்டித் தீர்ப்பார்கள்..இந்தப் பதிவைப் படித்தாலாவது ஒரு நான்கு பேராவது மாறிவிடமாட்டார்களா ் என்ற நப்பாசையில்தாற் இப்பதிவை எழுதுகிறேன்.. அன்புள்ள அம்மாக்களே உங்கள் மகனுக்குப் பெண்பார்க்கும்போது குணத்தில் அழகான பெண்ணையும் கொஞ்சம் பாருங்கள்..<br />
<br />
பணிக்கு வந்து பன்னிரண்டு ஆண்டுகளில் நிறவேறுபாடு பார்க்காமல் நடுநிலையோடு நடந்துகொண்டேனா என்று என்னிடம் மனசாட்சியைத் தொட்டுக் கூறச்சொன்னால் ,சரியாக ஞாபகம் இல்லை கொஞ்சம் யோசித்துச் சொல்கிறேன் என்றுதான் கூறத் தோன்றுகிறது..நாமும் மனிதர்கள்தானே..சிவப்பாய் இருக்கும் மாணவர்கள் படிப்பில் சிறந்தவர்கள் என்று பலநேரங்களில் நினைத்ததுண்டு.. ஆசிரியர்களே, பெற்றோர்களே உங்களால்தான் இந்நிலை மாறமுடியும் ..உங்களிடம் படிக்கும் குழந்தைகளை நிறத்தால் மதிப்பிடாதீர்கள்..கருப்பாய் இருக்கும் மாணவர்களின் தாழ்வு மனப்பான்மையைப் போக்குங்கள்..அவர்களுக்கு அன்பையும் தன்னம்பிக்கையையும் அள்ளிக்கொடுங்கள்..நிறவேறுபாடு நீங்கி நிம்மதியான உலகம் தோன்றட்டும்.. சொல்லவந்ததை முழுதாகச் சொன்னேனா என்று தெரியவில்லை..விடுபட்ட கருத்துக்களை விவாதிப்போம்..நன்றியுடன் உங்கள் கலியபெருமாள்..</div>
கலியபெருமாள் புதுச்சேரிhttp://www.blogger.com/profile/09348935882490903193noreply@blogger.com5tag:blogger.com,1999:blog-3040317698000028196.post-8908464562782372982018-02-18T22:39:00.001+05:302018-02-19T07:47:18.763+05:30அரசாங்கத்திலும் கட்டணக்கொள்ளையா!!?<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனம் ரயில்வேதுறை என்பது அனைவரும் அறிந்ததே..சாமாணிய மக்களின் தொலைதூரப் பயணத்திற்கு உதவும் ஆபத்பாண்டவன் ரயில்வண்டிதான்..அப்படி ஒரு மரியாதை நேற்று வரை இருந்தது..ஆனால் இன்று கோபம் வருகிறது...இவனுக்கு வேற வேலையே இல்ல போல..நாட்டுல எவ்ளோ நல்ல விஷயம் நடக்குது..அதலாம் விட்டுட்டு எங்கெங்க என்னென்ன குறையுதுனு பாக்கறதுதான் உன் வேலையா என்பது காதில் விழுகிறது..நாம எப்படியோ யார் செஞ்ச புண்ணியத்துலயோ ஒரு அரசாங்க வேலைக்கு வந்துட்டோம்..ஆனால் இன்றைய காலகட்டம் அப்படியல்ல...ஆயிரம் பேர் தேவைப்படுற வேலைக்கு 5 லட்சம் பேர் விண்ணப்பிக்கறாங்க..இன்றைய வேலைவாய்ப்பு என்பது ஓட்டப்பந்தயமாக இல்லை..மாரத்தான் ஓட்டமாகி விட்டது...அதிலும் ஓட திறமையான ஒரு ஏழை இளைஞன் வந்தால் அவனிடம் பத்தாயிரம் ரூபாய் கேட்டால் அவன் என்ன செய்வான்..?<br />
<br />
இப்படித்தான் உள்ளது இன்றைய அரசின் கொள்கை..சமீபத்தில் ரயில்வே துறையில் வந்த வேலைவாய்ப்புச் செய்தியை எல்லோரும் பார்த்திருப்பீர்கள்...ஒரே சமயத்தில் இரண்டு notification..அதுவும் 89000 பேருக்கு வேலைவாய்ப்பு..ஆஹா அருமையான அரசு..மக்களின் மீது எவ்வளவு அக்கறை என்று பார்த்தால் வச்சாங்க பாரு ஆப்பு..ஒவ்வொரு தேர்விற்கும் 500 ரூபாய் தேர்வுக்கட்டணமாம்..இரண்டு வேலைகளுக்கும் விண்ணப்பிக்க 1000 ரூபாய் செலுத்த வேண்டுமாம்..என்ன ஒரு வியாபார யுக்தி..எப்படியும் பத்தாயிரம் கோடி தேறும் தேர்வுக்கட்டணம்..வங்கி மோசடிகளை சமாளிக்க தேவைப்படலாம்..நான் எந்த கட்சிக்கும் எதிரானவன் அல்ல..சாமாணிய மக்களின் வயிற்றில் இப்படியா அடிப்பது? ஏற்கனவே இதைப்பற்றி ஏழைகள்தான் ஏமாந்தவர்களா? என்னும் தலைப்பில் எழுதியிருக்கிறேன்..<br />
<br />
இதற்கெல்லாம் ஒருபடி மேலே போய் ஆன்லைன் விண்ணப்பத்தில் ஏதேனும் தவறுசெய்து விட்டால் பரவாயில்லையாம்..அந்தத் தவறைத் திருத்திக்கொள்ள இன்னும் ஒரு 250 ரூபாய் கட்டினால் போதுமாம்..தேர்வு எழுதும் ஏழை மாணவர்கள் மீது என்ன ஒரு பாசம் அரசிற்கு..இதை பகல்கொள்ளை என்று சொல்வதா அல்லது கடல்கொள்ளை என்று சொல்வதா தெரியவில்லை..எப்படியாவது இந்தத் தேர்விலாவது கஷ்டப்பட்டு எழுதி ஒரு வேலைக்குச் சென்றுவிட வேண்டும் என்று நினைக்கும் இளைஞர்களை ஊக்கப்படுத்தாவிட்டாலும் பரவாயில்லை..அவர்கள் கனவில் மண் அள்ளிப்போடவா அரசாங்கம்..எத்தனை கோடி இலவசங்கள்,எத்தனை கோடி தள்ளுபடிகள் ? ஆனால் உங்கள் அரசு வேலைத் தேர்வுக்கு ஏழை மாணவர்களிடம் சுரண்டுவது எந்த வகையில் நியாயம்?<br />
<br />
தேர்வுக்கட்டணம் 200 ரூபாய் வைத்தால் கூட பரவாயில்லை..500 ரூபாய் என்பது நடுத்தர குடும்பத்தினருக்கே கொஞ்சம் அதிகமான தொகைதான்..ஒவ்வொரு போட்டித்தேர்வுக்கும் 500,, 1000 கட்டணம் கட்ட பயந்தே பல பேர் விண்ணப்பிப்பதே இல்லை..நல்லதோர் வீணை செய்தே பாடல்தான் நினைவில் வருகிறது..எத்தனையோ திறமைசாலிகள் இத்தகைய பிரச்சனையால் வேலையின்றி திரிகின்றனர்..இதை உடனடியாக அரசின் பார்வைக்கு கொண்டு செல்ல அதிகமாகப் பகிருங்கள்..விரைவில் விடியட்டும் ஏழைகளின் வாழ்வு?<br />
<br />
முதல்ல வேலை கொடுங்க..அப்பறம் 500 என்ன 5000 கூட கட்டுகிறோம் என்ற ஏழைகளின் குரலாய் உங்கள் கலியபெருமாள்...<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiC4E1GPD2DcZDhkSLdjcHzxexC8jEHu2gdxZ8G-WEJPAflu9cc5kus3K9t1dhCXSoObejlBRPNOO38t5fzMtCXzK3tUlQAazjSdhmdRbipC_6YomXWtX-KhXm-mRRuMGSbqEwxeHLdIIqu/s1600/images+%252824%2529.jpeg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="183" data-original-width="275" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiC4E1GPD2DcZDhkSLdjcHzxexC8jEHu2gdxZ8G-WEJPAflu9cc5kus3K9t1dhCXSoObejlBRPNOO38t5fzMtCXzK3tUlQAazjSdhmdRbipC_6YomXWtX-KhXm-mRRuMGSbqEwxeHLdIIqu/s1600/images+%252824%2529.jpeg" /></a></div>
</div>
கலியபெருமாள் புதுச்சேரிhttp://www.blogger.com/profile/09348935882490903193noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3040317698000028196.post-86446797578392440432018-02-11T23:18:00.000+05:302018-02-11T23:18:44.208+05:30பகுத்தறிவை ஏற்போம்..கொஞ்சம் பாரம்பரியமும் காப்போம்..<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
நல்லார் ஒருவர் உளரேல் அவர்பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் மழை என்பார்கள்..அதுபோலத்தான் நம் முன்னோர்களின் பண்பாட்டையும் பாரம்பரியத்தையும் விரல் நுனியில் பிடித்துக் கொண்டிருக்கும் சிலரால்தான் இன்னமும் என் தேசம் அழியாமல் இருக்கிறது..<br />
<br />
<br />
இயற்கையைத்தான் நம் முன்னோர்கள் கடவுளாக வணங்கி வந்தார்கள்..கடல்,மலை,மழை,சூரியன், சந்திரன்,கோள்கள் என அனைத்தையும் கடவுளாக வழிபட்டனர்..அதுவரை மனிதன் நல்லவனாகவும் இயற்கையை நேசித்தும் வந்தான்..ஆனால் இயற்கை வேறு, கடவுள் வேறு என்று எண்ண ஆரம்பித்த நாளில் மனித இனத்தின் அழிவு துவங்கியது..உலகில் கடவுள் இல்லை என்று பகுத்தறிவு பேசத்தொடங்கிய நாளில் நம் பாரம்பரியமும் ஒவ்வொன்றாக காணாமல் போகத்துவங்கியது..<br />
<br />
பகுத்தறிவாளர்கள் யாரும் உடனே சண்டைக்கு வந்துவிடாதீர்கள்..நான் பகுத்தறிவுக்கு எதிரானவன் அல்ல...சந்தேகம் இருந்தால் தலைப்பைப் படிக்கவும்..<br />
<br />
நான்கு எழுத்து படித்துவிட்டோம் என்ற மமதையில் நம் பெற்றோர் எந்த பழக்கம் சொன்னாலும் அதில் குற்றம்குறை கூறி அவர்களைப் படிக்காத முண்டங்கள் என்று கேலி செய்தோம்..ஆனால் அவர்களின் பழக்கவழக்கங்கள் எல்லாம் இன்று அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்படுகிறது..நானும் கூட என் தாத்தா பாட்டியை நக்கலடித்திருக்கிறேன் பட்டிக்காடுகள் என்று..<br />
<br />
இன்று நமக்கு அறிவுரை கூற மூத்தோர்களும் யாரும் நம் வீட்டில் இல்லை..இயற்கையும் இங்கே இல்லை..சாப்பிடும் இலைகூட செயற்கையில் வந்துவிட்டது...<br />
<br />
செயற்கைக்கோள் எல்லாம் விட்டு செவ்வாய்க் கோளை சிவப்புக்கோள் என்று சமீபத்தில் கூறியவன் அமெரிக்காகாரன்..ஆனால் பெயரிலேயே செவ் வாய் என்று பல நூறு ஆண்டுகளுக்கு முன்னரே அழைத்தவன் தமிழன்.<br />
<br />
தாலிக்கயிறையே இன்று சிலர் அசிங்கமாக நினைக்கிறார்கள்..ஆனால் தாலிக்கயிறில் மஞ்சள்பூசி குளித்தால் மார்பகப்புற்றுநோய் வராது என்று ஒரு வெள்ளைக்காரன் சொன்னால்தான் நாம் கேட்போம்..குழந்தைகளைப் போட்டோ எடுத்தால் ஆயுசு குறையும் என்று நம் தாத்தாக்கள் கூறுவார்கள்..இன்று கேமராவின் ஒளிக்கதிர்கள் குழந்தைகளின் கண்பார்வையையும் மூளை நரம்புகளையும் பாதிக்கும் என்று அறிவியல் அறிஞர்கள் கூறுகிறார்கள்..<br />
<br />
வீட்டிற்குள் நகம் வெட்டவேண்டாம் என்றது, தொப்புள்கொடி தாயத்து கட்டுவது, கோபுர கலசங்கள் அமைத்தது, விரதங்கள் மேற்கொண்டது, கீழே அமர்ந்து இலையில் சாப்பிட்டது, திருவிழா சடங்குகள், காலையில் பழையசாதம் சாப்பிட்டது என்று எதைப்பட்டியலிடுவது நம் முன்னோர்களின் அறிவை அறிய..அவர்கள் படிக்காத மேதைகளாய் இருந்திருக்கிறார்கள்..நாமோ படித்த முண்டங்களாய் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்..கோவில்களில் கடவுள் இருப்பதாக நம்பவேண்டாம்..பழங்கால கோவில்கள் அனைத்தும் மனிதனுக்கு புத்துணர்ச்சியை வழங்கிய சக்திமையமாக இருந்திருக்கின்றன என்பதில் ஐயமில்லை..<br />
<br />
கடவுளை நம்புகிறீர்களோ இல்லையோ இயற்கையை நம்புங்கள்..மூடநம்பிக்கைகளையும் கொஞ்சம் மறுபரிசீலனை செய்யுங்கள்..அதிலும் ஏதாவது அறிவியல் உண்மை ஒளிந்திருக்கலாம்..ஆலங்குச்சியையும், மாட்டுச்சாணத்தையும் நம்மூரிலும் பாக்கெட்டில் விற்கும் காலம் வரலாம்..விடுபட்டவைகளை விமர்சனத்தில் விவாதிப்போம்..மூத்தோர் சொல்வார்த்தை அமிர்தம் என்னும் கொன்றைவேந்தன் வரிகளோடு விடைபெறுகிறேன்...நன்றியுடன் கலியபெருமாள்..<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg9FB-bDKaH3pdMMMRm_3Aeeq25Y44Pr1-oXyeCDE1ikIh00rTP6EWKvFlekLY9ao-JSK8sNmGeIzAQXnkLDYgz-Xp7-I3KcVCoG4XKtwXbeY_YlPkPT1_xZtVZQzJqDBb3-s7O4qzUlHHY/s1600/images+%252822%2529.jpeg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="286" data-original-width="515" height="177" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg9FB-bDKaH3pdMMMRm_3Aeeq25Y44Pr1-oXyeCDE1ikIh00rTP6EWKvFlekLY9ao-JSK8sNmGeIzAQXnkLDYgz-Xp7-I3KcVCoG4XKtwXbeY_YlPkPT1_xZtVZQzJqDBb3-s7O4qzUlHHY/s320/images+%252822%2529.jpeg" width="320" /></a></div>
<br /></div>
கலியபெருமாள் புதுச்சேரிhttp://www.blogger.com/profile/09348935882490903193noreply@blogger.com6tag:blogger.com,1999:blog-3040317698000028196.post-88283382616553029512018-01-20T22:44:00.000+05:302018-01-20T22:44:52.222+05:30போக்குவரத்து விதிகளை மீறும் பொ...போக்குகள்..<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
தலைப்புக்காக நண்பர்கள் முதலில் மன்னிக்கவும்..போக்குவரத்து விதிகளை மதிக்காத பண்ணாடைகளுக்கு இந்த மரியாதையே அதிகம்<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjWjYOlFM7hpT5Ot0TrpXy8v1F4r6lj-bL_mzw11Z3ueJSllWNUwOhDFvbNNQjL2-LR-Paesnz7zBWlnhmfwuhyphenhyphenYjKCWgKaqulFeINo0DxUt0z4vneUGzGXd35VYwpr-kcQ4eqjpIlxE7AH/s1600/unnamed.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="286" data-original-width="515" height="177" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjWjYOlFM7hpT5Ot0TrpXy8v1F4r6lj-bL_mzw11Z3ueJSllWNUwOhDFvbNNQjL2-LR-Paesnz7zBWlnhmfwuhyphenhyphenYjKCWgKaqulFeINo0DxUt0z4vneUGzGXd35VYwpr-kcQ4eqjpIlxE7AH/s320/unnamed.jpg" width="320" /></a></div>
என்று நினைக்கிறேன்..அதனால்தான் இந்தத் தலைப்பு..யாருக்கும் அறிவுரை கூறி திருத்துவதற்காக இப்பதிவு எழுதப்படவில்லை...எத்தனையோ திரைப்படங்களில் காட்டுகின்றனர்; தினம்தினம் செய்தித்தாள்களில் எத்தனையோ விபத்துச் செய்திகள் வந்துகொண்டுதான் இருக்கின்றன...ஆனால் எவனும் இங்கே திருந்திய பாடில்லை..(ஒருசிலரைத் தவிர., அதுவும் திருமணமாகி குழந்தைகள் பிறந்தபிறகு) ..மனதில் இருக்கும் கோபத்தை யாரிடமாவது கொட்டித் தீர்க்கவே இப்பதிவு..<br />
<br />
ஒவ்வொரு நாளும் வெளியில் செல்லும்போது இப்போதெல்லாம் திரும்பி உயிருடன் வருவோம் என்ற நம்பிக்கை இல்லாமல்தான் செல்லவேண்டி இருக்கிறது..அதுவும் இருசக்கர வாகனத்தில் செல்வோர் உயிரைப் பிடித்துக் கொண்டுதான் செல்லவேண்டியிருக்கிறது ஒவ்வொரு நொடியும்.<br />
<br />
புதுச்சேரியில் வாகனம் ஓட்ட இரண்டு கண்கள் போதாது..குறைந்தது ஆறு கண்களாவது வேண்டும்..இடது பக்கத்தில் ஏறிவரும் எருமைகளைப் பார்ப்பதா? சந்திலிருந்து சரக்கென்று உள்ளே புகும் சனியன்களைப் பார்ப்பதா? விதிகளை மதிக்காதவர்கள் என் தேசத்தில் திறமைசாலிகள்..எல்லாவற்றையும் ஏற்று நடப்பவர்கள் இங்கே ஏமாளிகள்...<br />
<br />
இப்போதெல்லாம் நகரத்திற்கு சென்றுவந்தாலே மன உளைச்சலோடுதான் வீட்டுக்கு வரவேண்டியிருக்கு..போக்குவரத்து நெரிசல் பழகிவிட்டது..போக்குவரத்து விதிமீறல்களைப் பார்த்தே மன உளைச்சல் அதிகமாகிறது..எவன் எப்படி போனால் நமக்கென்ன என்று செல்ல முடியவில்லை..ஏனென்றால் அந்த பண்ணாடைகளால் அதிகம் பாதிக்கப்படுவது ஒழுங்காகச் செல்லும் நாம்தான்..சாலை விபத்துக்களில் உயிரிழக்கும் பாதிப்பேர் ஒழுங்காக ஓட்டிவந்தவர்கள்தான்..அவர்கள் என்ன பாவம் செய்தார்கள்?<br />
<br />
கற்பனையில் மட்டுமே அந்நியன் ஆகமுடிகிறது நம்மால் ..One way ல் செல்லும்போது எதிர்த்திசையில் எழுபது கிலோமீட்டர் வேகத்தில் எருமைகளைப் பார்க்கும்போது செருப்பாலடிக்கத் தோன்றும்...உண்மையில் நாம்தான் தவறாகச் செல்கிறோமோ என்று நினைக்கும் அளவுக்கு வேகமாக வருகிறார்கள்..<br />
<br />
என் தேசத்தில்தான் சட்டம் எதுவும் செய்யாதே..அப்புறம் எப்படி பயப்படுவான்..போலீஸ் புடிச்சாலும் வட்டம், மாவட்டம்னு எவனாச்சும் போன் பண்ணுவான்..இதுதான் ஜனநாயக நாடாச்சே..<br />
<br />
எதுனா ஒன்னுன்னா சிங்கப்பூர உதாரணமா சொல்றானுங்க..ஆனால் அது சர்வாதிகார சட்டங்கள் கொண்ட நாடென்பது எவனும் அறிவதில்லை..சட்டங்களும் தண்டனைகளையும் கடுமையாக்காமல் இவனுங்கள திருத்தவே முடியாது..மனுநீதிச்சோழன்கள்தான் தேவை இங்கே என் தேசத்திற்கு.. காந்தியே மறுபிறவி எடுத்து வந்தாலும் சிக்னலை மதிக்காதவனையும் தாறுமாறாய் ஓட்டும் தறுதலைகளையும் ரயில்வே கிராசிங்கில் வழியை அடைத்து நிற்கும் ரவுடிகளையும் பார்த்தால் அகிம்சையைத் தூக்கி எறிந்துவிட்டு ஆயுதமே கையில் எடுப்பார்..<br />
<br />
எட்டாம் வகுப்பு படிக்கும் பன்றிகள் கூட Enfield ஓட்டுகிறது...யாரை செருப்பால் அடிப்பது இங்கே..ஆணுக்கிங்கே பெண் இளைப்பில்லை காணென்று கூறிக்கொண்டு ஒரு பெண் செல்போனை காதில் வைத்துக்கொண்டு வண்டி ஓட்டிச் சென்ற கொடுமையை நேற்று கண்டேன்..வாழ்க பெண் சுதந்திரம்!? நீங்க யாரும் இல்லாத ரோட்டுல போய் எப்படியாவது ஓட்டி நாசமா போங்கடா...ஒழுங்கா போறவன் உயிர வாங்காதீங்கடா..சத்தியமா இதப்படிச்சு எவனும் திருந்த மாட்டானு தெரியும்...அடுத்த பதிவில் சந்திக்கும் வரை உங்கள் கலியபெருமாள்...</div>
கலியபெருமாள் புதுச்சேரிhttp://www.blogger.com/profile/09348935882490903193noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-3040317698000028196.post-71560509169932213942018-01-04T21:31:00.000+05:302018-01-05T05:48:30.476+05:30கந்துவட்டி தற்கொலைகளுக்கு யார் காரணம்?<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
2017 ஆம் ஆண்டு ஒருவழியாக பல பிரச்சினைகளைப் பார்த்துவிட்டது முடிந்துவிட்டது..சென்ற வருடம் பார்த்த பல்வேறு பிரச்சனைகளுள் ஒன்று கந்துவட்டி தற்கொலை பிரச்சனை..வருடத்தின் இறுதி நாளில் கூட செய்தித்தாளில் ஒரு தற்கொலை செய்தி கந்துவட்டி பிரச்சனையால் கண்கலங்க வைத்தது..கந்துவட்டி என்ற பெயரில் வட்டிக்குவிடும் பெரியமனிதர்கள் போர்வையில் திரியும் ரௌடிகள் மட்டும்தான் இதற்குக் காரணமா? அவர்களை எல்லோரையும் ஒரே நாளில் இல்லாமல் போகச்செய்து விடமுடியுமா? அரசாங்கம் நினைத்தால் ஒரே நாளில் ஒழித்துவிட முடியுமா? என்றால் முடியாது என்பதுதான் உடனடி பதில்...<br />
<br />
ரஜினி சொல்வது போல இங்கே சிஸ்டமே கெட்டுப் போயிருக்கு..அவற்றை எல்லாம் ஒரே நாளில் அதிரடி நடவடிக்கை இல்லாமல் மாற்ற முடியாது...மாறவேண்டியது உண்மையில் பொதுமக்களாகிய நாமும்தான்...மக்களின் பேராசையால்தான் கந்துவட்டி தொழில் தெருவுக்கு தெரு கொடிகட்டி பறக்கிறது..<br />
<br />
இருப்பதைக் கொண்டு யாரும் திருப்தி அடைவதில்லை..ஒரே நாளில் எல்லோருக்கும் அம்பானி ஆக வேண்டும் என்ற ஆசை மட்டும் இருக்கிறது..அம்பானி கூட படிப்படியாகக் கஷ்டப்பட்டு முன்னேறியவர்தான் என்பதை மறந்துவிட்டு...<br />
<br />
ஒவ்வொருவருக்கும் ஒரு காரணம் கடன் வாங்க..சிலர் சொந்தவீடு கட்டவும்,சிலர் தொழில் தொடங்கவும்,சிலர் பெண்ணின் திருமணச்செலவுகளுக்கும், சிலர் அவசர மருத்துவச் செலவுக்கும், சிலர் ஏன் வாங்குகிறோம் என்றே தெரியாமல் வாங்குகின்றனர்..தங்கள் தகுதியை மீறி.. பாட்ஷா படத்தில் ரஜினி பேசும் கடன் வாங்கறதும் தப்பு. கடன் கொடுக்கறதும் தப்பு என்ற வசனம் கேட்பதற்கு ரொம்ப சாதாரணமாகத் தோன்றினாலும் ஆழமாக யோசித்தால் அதன் அர்த்தம் புரிகிறது...<br />
<br />
சிலர் எந்த ஒரு பயிற்சியும் முன்னறிவும் இல்லாமலே இருக்கும் வீட்டை அடகுவைத்து தொழில் தொடங்குகின்றனர்...நஷ்டமானால் என்ன ஆகும் என்று எதிர்மறையாகவும் சிலநேரங்களில் சிந்திக்கவேண்டும்..<br />
<br />
பலருக்கு வாடிக்கையாளர்களிடம் எப்படி பேச வேண்டும் என்ற பண்பாடு,தொழில் ரகசியம் கூட தெரிவதில்லை..கடனை வாங்கி கடை வைத்து என்ன பயன்..நானே சில கடைகளுக்குச் செல்லும்போது ஏன்டா இந்தக் கடைக்கு வந்தோம் என்று யோசித்திருக்கிறேன்... சிலர் சிடுமூஞ்சிகளாக இருப்பார்கள்..வாடிக்கையாளரின் மனதைக் கொஞ்சமாவது குளிரவைக்கும் ரகசியம் தெரியவேண்டும்...<br />
<br />
அப்படியே தொழிலில் நஷ்டம் ஏற்பட்டாலும் கௌரவம் பார்க்காமல் இருப்பதைக் கொண்டு கடனை அடைத்துவிட்டு ஏழையாக வாழ்ந்தாலும் மானத்தோடு வாழ்வதில் தவறில்லை...தற்கொலை ஒன்று மட்டுமே தீர்வல்ல ...வாழ நினைத்தால் வாழலாம்...<br />
<br />
ஆனால் பல பணக்காரர்களும் கடன்சுமை அதிகமானாலும் தங்கள் சொகுசு வாழ்க்கையிலிருந்து ஒருபடி கூட இறங்கிவர நினைப்பதில்லை..எது கௌரவம், எது வெட்டி கௌரவம் என்று அறிவதில்லை...<br />
<br />
நான் நேரடியாகவே பலரைப் பார்த்திருக்கிறேன்..கடன்காரன் கழுத்தை நெரிக்கும்போது கூட தங்கள் உணவுப் பழக்கம், உடை, வெட்டி செலவுகள் எதையும் குறைத்துக்கொள்வதில்லை...கடன் தொல்லை இருக்கும்போது கூட பியூட்டி பார்லருக்கு பத்தாயிரம் செலவு செய்பவர்களைப் பார்த்திருக்கிறேன்...<br />
<br />
இவர்களை யார் திருத்துவது...கடைசியில் கடன் அதிகமாகி விட்டது என்று தற்கொலை செய்வதால் யாருக்கு என்ன லாபம்? கந்துவட்டி காரர்களை கடவுள் பார்த்துக் கொள்வார்...அரசாங்கம் என்ன செய்கிறது என்பதை விட நாமும் மாறவேண்டும்...கந்துவட்டிக் காரர்களுக்கு நான் ஒன்றும் ஆதரவாகப் பேசவில்லை...இந்தக் காலத்தில் கடன் வாங்காமல் வாழ்வதென்பது கொஞ்சம் கஷ்டம்தான்...ஆனால் விரலுக்கேத்த வீக்கத்தோடு வாழப் பழகினால் பல உயி்ர்ப் பலிகளைத் தடுத்திடலாம்...நன்றி..<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh8AlzFupdNZw7Gdh8hM4h9OFlAt9VuKDo5DQUrxD1uFdX4hUH1Rbb8RKe6rF3xdnF3slWbQKfKyW8Qj6MV1BEunCcrAp_p-6pt70DAr4aqRVGBNgGUHEjXvhtTV6XiCPMMC2AmKH1FXOtB/s1600/images+%252815%2529.jpeg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="342" data-original-width="430" height="254" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh8AlzFupdNZw7Gdh8hM4h9OFlAt9VuKDo5DQUrxD1uFdX4hUH1Rbb8RKe6rF3xdnF3slWbQKfKyW8Qj6MV1BEunCcrAp_p-6pt70DAr4aqRVGBNgGUHEjXvhtTV6XiCPMMC2AmKH1FXOtB/s320/images+%252815%2529.jpeg" width="320" /></a></div>
<br />
<br /></div>
கலியபெருமாள் புதுச்சேரிhttp://www.blogger.com/profile/09348935882490903193noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-3040317698000028196.post-70640953604644693172017-12-31T21:58:00.001+05:302017-12-31T22:59:03.841+05:30போதையில்லாத புத்தாண்டு வேண்டும்!!?<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
புத்தாண்டை எண்ணி புலகாங்கிதம் அடையமுடியவில்லை... புதுவசந்தம் வந்ததென்று புன்முறுவல் பூப்பதில்லை..<br />
<br />
புத்தகச் சுமையில்லா பள்ளி என்று வருமோ,<br />
புகையில்லாத காற்று என்று இருக்குமோ,<br />
<br />
போதையில்லா சமூகம் என்று தோன்றுமோ,<br />
<br />
புழுதி இல்லாத சாலைகள் உருவாகுமோ,<br />
<br />
புரிதலுடன் குடும்பங்கள் என்று இணையுமோ,<br />
<br />
புதுமைகளைப் படைக்க இளைஞர்கள் என்று புறப்படுவார்களோ,<br />
<br />
பொதுவுடைமைக்காக புரட்சிகள் உதயமாகுமோ,<br />
<br />
பூசல் இல்லாமல் மாநிலங்கள் ஆகுமோ,<br />
<br />
பூரணமான புத்தாண்டு அன்றுதான் என் தேசத்திற்கு...<br />
<br />
இருந்தாலும் என்றாவது ஒருநாள் என் தேசம் முன்னேறிவிடும் என்று வாழும் நேர்மறை மனிதர்களுக்காக என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்..</div>
கலியபெருமாள் புதுச்சேரிhttp://www.blogger.com/profile/09348935882490903193noreply@blogger.com6tag:blogger.com,1999:blog-3040317698000028196.post-82271765654733855972017-12-28T23:00:00.001+05:302017-12-29T10:03:00.309+05:30இந்திய மாநிலங்களும் தலைநகரங்களும் -இசை வடிவில்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
அரையாண்டுத் தேர்வு விடுமுறை என்பதால் மீண்டும் பதிவுலகம் பக்கம் தலைகாட்டிவிட்டு போகலாம் என்று வந்தேன்...போனவருடம் இந்திய மாநிலங்கள் கற்பித்தல் சிறுமுயற்சி என்னும் தலைப்பில் ஒரு சிறு பதிவு எழுதியிருந்தேன்..அதற்கு சில ஆசிரியர்களிடமிருந்து நல்ல வரவேற்பு கிடைத்தது..என் நண்பர்களிடம் அதைப்பற்றி கூறியபோது மாநிலங்கள் பெயர் மட்டும்தான் பாடுவார்களா? தலைநகரங்கள் தெரியாதா? என்று கேட்டார்கள்..அந்த கேள்விதான் இன்று பதிலாக வந்திருக்கிறது...ஏதோ எனக்குத் தெரிந்த மெட்டில் ஒரு பாடலாக உருவாக்கியிருக்கிறேன்...இசையமைத்துப் பாடுமளவுக்கு இசை ஞானமெல்லாம் கிடையாது..இந்த காலத்து மாணவர்களுக்கு எப்படிப் பாடினால் பிடிக்கும் என்று யோசித்து முயற்சித்திருக்கிறேன்..என் முயற்சி வீண்போகாது என்று நம்புகிறேன்...அடுத்த வாரத்திற்குள் என் மாணவர்களை மாநிலங்களையும் தலைநகரங்களையும் பாடவைத்துவிடுவேன் என்று நம்புகிறேன்...<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiMBzbxWK8HC3qoSaWGeoB1KTPG0kz_xILaMrMhD8VWZfrHdCK8u7eqGOZu8ZGKI7lPrtM9Phif8NHKiRp5Slc41duRG6g0m8HTsLo5D0Qi-rLdWaLPKqRNvY_ZudbvFUJANHC2elOOoPpo/s1600/india-map-languages.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="944" data-original-width="800" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiMBzbxWK8HC3qoSaWGeoB1KTPG0kz_xILaMrMhD8VWZfrHdCK8u7eqGOZu8ZGKI7lPrtM9Phif8NHKiRp5Slc41duRG6g0m8HTsLo5D0Qi-rLdWaLPKqRNvY_ZudbvFUJANHC2elOOoPpo/s320/india-map-languages.jpg" width="271" /></a></div>
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<iframe allowfullscreen="" class="YOUTUBE-iframe-video" data-thumbnail-src="https://i.ytimg.com/vi/voDcYnqbWuI/0.jpg" frameborder="0" height="266" src="https://www.youtube.com/embed/voDcYnqbWuI?feature=player_embedded" width="320"></iframe></div>
உங்களுக்கும் பிடித்திருந்தால் உங்கள் குழந்தைகளுக்கும் முயற்சித்துப் பாருங்கள்...உண்மையைச் சொல்லப்போனால் பலநேரங்களில் வடகிழக்கு மாநிலங்களின் தலைநகரத்தைக் கேட்டால் நமக்கே தடுமாற்றம் வரும்..ஆனால் இப்பொழுது நான் கற்றுக் கொண்டேன்... என்னாலான இந்த சிறுமுயற்சி யாருக்கேனும் பயன்பட்டால் கடலளவு மகிழ்ச்சி..என் முகத்தைப் பார்த்து யாரும் பயப்பட வேண்டாம்னுதான் முகம் காட்டாமல் பாடியிருக்கிறேன்..அடுத்த பதிவில் சந்திக்கும்வரை உங்கள் கலியபெருமாள்..உங்கள் கருத்துக்களை எதிர்பார்த்து....</div>
கலியபெருமாள் புதுச்சேரிhttp://www.blogger.com/profile/09348935882490903193noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-3040317698000028196.post-72820496236466418822017-12-04T21:32:00.002+05:302017-12-04T21:32:38.099+05:30எல்.ஐ.சி பாலிசியுடன் ஆதாரை இணைப்பது எப்படி?<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
அதுக்கு ஆதார் இதுக்கு ஆதார்னு இணைக்கச் சொன்னாங்க..இப்போ LIC policy -யையும் ஆதாரோட இணைக்கச் சொல்லி மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது..அதுவும் டிசம்பர் 31க்குள்...ஆனால் அதற்காக யாரும் கவலைப்பட வேண்டியதில்லை..ஆன்லைனிலேயே ஆதாரை இணைக்க LIC link கொடுத்துள்ளது..<br />
<br />
licindia.in தளத்தினுள் சென்று link aadhaar இணைப்பை சொடுக்கினால் சில instructions வரும்..<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj0rcOHi4kQvcmrtReCidp-9ZveosrzKh2B5QiFGyKDOnjwh_-OP15Mg5UAnU1YYn1hDz0UJJhwokdnhbz8tR0PFjgCYhFOfhWPgwrTkRIWGin3twxa7eG0e6B2Zeuqy5UCC0jCNg6zOEyV/s1600/Screenshot_20171204-210451.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="1440" data-original-width="720" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj0rcOHi4kQvcmrtReCidp-9ZveosrzKh2B5QiFGyKDOnjwh_-OP15Mg5UAnU1YYn1hDz0UJJhwokdnhbz8tR0PFjgCYhFOfhWPgwrTkRIWGin3twxa7eG0e6B2Zeuqy5UCC0jCNg6zOEyV/s320/Screenshot_20171204-210451.png" width="160" /></a>உங்கள் ஆதார் எண்ணையும் PAN எண்ணையும் தயாராக வைத்துக்கொள்ளவும்..உங்கள் பாலிசி எண்களையும் எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்..proceed கொடுத்தால் புதிய window வரும்..</div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
அதில் உங்கள் பெயர்,பிறந்த தேதி.,உங்கள் மெயில்,ஆதார் எண்.,PAN எண்,மொபைல் எண்.,பாலிசி எண் ஆகியவற்றை உள்ளிட்டு GET OTP பட்டனை அழுத்தினால் உங்கள் மொபைலுக்கு ஒரு OTP எண் வரும் ..அதை enter செய்து முடித்துவிட்டால் போதும் உங்களது LIC policy ஆதார் மற்றும் PAN உடன் இணைக்கப்பட்டுவிடும்..</div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj_ubnZH4VHhRmXfEGAq5Lrvu6QY35quq1s1dBYpPL3uRTrJbhPDNvDg0CaYtvZXmof-GZ4ih9Yzbx9pzvO7P3fJeS2dUaIMBamEJUJBnGgaQANmKf8liUodjdGF82rymkp-mZfJDfNny1p/s1600/Screenshot_20171204-210530.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="1440" data-original-width="720" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj_ubnZH4VHhRmXfEGAq5Lrvu6QY35quq1s1dBYpPL3uRTrJbhPDNvDg0CaYtvZXmof-GZ4ih9Yzbx9pzvO7P3fJeS2dUaIMBamEJUJBnGgaQANmKf8liUodjdGF82rymkp-mZfJDfNny1p/s320/Screenshot_20171204-210530.png" width="160" /></a>பலருக்கும் எளிமையானதாக இருந்தாலும் சிலருக்குப் பயன்படலாம் என்பதால் பகிர்கிறேன்..இன்றே இணைத்திடுங்கள் உங்கள் எல்.ஐ.சியை ஆதாருடன்..ஒரே சமயத்தில் நிறைய பாலிசிகளையும் add policy கொடுத்து இணைக்கலாம்...அடுத்த பதிவில் சந்திக்கும் வரை நன்றியுடன் கலியபெருமாள்..</div>
</div>
கலியபெருமாள் புதுச்சேரிhttp://www.blogger.com/profile/09348935882490903193noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-3040317698000028196.post-66604845682760952342017-08-09T19:13:00.004+05:302017-08-09T19:21:17.157+05:30எல்.ஐ.சி (LIC)- சில பயனுள்ள தகவல்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
நீ எப்படா LIC ஏஜன்டா ஆனன்னு கேக்கறீங்களா...அப்படிலாம் ஒன்னுமில்லீங்க..ஏதோ நமக்கு தெரிஞ்ச விஷயத்த நாலு பேருக்கு சொல்லுவோமே..அதுக்குத்தான் இந்த பதிவு..<br />
LIC பயனுள்ளதா ,பயனற்றதா என்பது அவரவரின் தனிப்பட்ட கருத்து..தினக்கூலி வேலைசெய்யும் கூலித்தொழிலாளி சேமிக்கும் ஒரு 500 ரூபாய் தன் மகளின் திருமணத்திற்கு உதவும் 50000 ரூபாய் LIC பாலிசி உண்மையில் உயர்ந்ததே..<br />
<br />
<br />
எல்.ஐ.சி பாலிசி போட்டு வைத்திருப்பவர்கள் பாலிசி பத்திரங்களை முதலில் ஒரு xerox copy போட்டு வீட்டில் வைத்துக்கொள்ளவும்..எப்பொழுதாவது தொலைந்துவிட்டால் வேறு duplicate bond பெற உங்கள் பாலிசி எண் அவசியம்..அப்பொழுது xerox copy உதவும்..சில நேரங்களில் தீவிபத்து போன்ற அசம்பாவிதங்கள் நேர்ந்தால் பாலிசி பாதிப்படையலாம்.அதனால் உங்கள் மொபைலில் ஒரு போட்டோ எடுத்துக்கூட சேமித்து வைத்துக்கொள்ளலாம்..<br />
பாலிசி தொலைந்துவிட்டால் வேறு பாலிசி பெறுவது எப்படி ?...<br />
<br />
LIC அலுவலகத்தில் தெரிவித்தால் ஒரு விண்ணப்பம் கொடுப்பார்கள்..அதைப்பூர்த்தி செய்யவேண்டும்..பிறகு பத்திரப்பதிவு அலுவலகம் சென்று LIC of INDIA ,PUDUCHERRY என்ற பெயரில் 100 ரூபாய் பத்திரம் ஒன்று வாங்கவேண்டும்..அதில் அருகிலுள்ள நோட்டரி பப்ளிக்கிடம் சென்று விவரம்,பாலிசி எண் கூறினால் அவர் அந்த பத்திரத்தை பூர்த்தி செய்து கையொப்பமிட்டு தருவார்..அவ்வளவுதான் வேலை முடிந்தது..அதைக் கொண்டுபோய் எல்.ஐ.சி அலுவலகத்தில் கொடுத்தால் உங்கள் முகவரிக்கு புதிய duplicate பாலிசி வந்துவிடும்..<br />
<br />
எல்.ஐ.சி பாலிசியின் எளிய கடன் வசதி..<br />
உங்கள் எல்.ஐ.சி பாலிசி மூலம் மிகக்குறைந்த வட்டியான 9% ல் குறைந்த அளவில் அவசரத்தேவைக்கு கடன் பெற முடியும்..நீங்கள் 1000 ரூபாய் பாலிசி பத்து வருடங்களுக்கு மேல் கட்டினால் குறைந்தது 50000 ரூபாய்க்கு மேல் கடன்பெற முடியும்..அதுவும் மூன்றை நாளில் நேரடியாக உங்கள் வங்கிக்கணக்கில்..எல்.ஐ.சி அலுவலகத்தில் கடன் விண்ணப்பம் பெற்று பூர்த்தி செய்து உங்கள் ஏஜன்டிடம் அதில் கையொப்பம் பெற்று கொடுத்தால் போதும்..விண்ணப்பத்தில் உங்கள் வங்கிக் கணக்கு எண்ணை எழுதிவிட்டால் போதும்.,இரண்டே நாளில் உங்கள் வங்கிக்கணக்கில் கடன்தொகை வந்துவிடும்..வெறும் முக்கால் பைசா வட்டியில் வங்கிகள் கூட கொடுப்பதில்லை..<br />
<br />
ஏதோ எனக்குத் தெரிந்த சில தகவல்கள்..யாருக்கேனும் பயன்பட்டால் மகிழ்ச்சி...அடுத்த பதிவில் சந்திக்கும் வரை உங்கள் கலியபெருமாள்...<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEie_P1KHjAe7hC1aszkLlJSGLm_YLMqQAeT4C8o8JRJnfSixDCZUOWTIzNnHmoWnAtItzkOHYX7RwmaXKdN7i93MhZSrTOGSyt6bFrIFcJdmvnxOGMRBJ4JsZCPs4pkfJdyocQnZqg7FRPL/s1600/lic_india_agent.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="180" data-original-width="555" height="103" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEie_P1KHjAe7hC1aszkLlJSGLm_YLMqQAeT4C8o8JRJnfSixDCZUOWTIzNnHmoWnAtItzkOHYX7RwmaXKdN7i93MhZSrTOGSyt6bFrIFcJdmvnxOGMRBJ4JsZCPs4pkfJdyocQnZqg7FRPL/s320/lic_india_agent.jpg" width="320" /></a></div>
</div>
கலியபெருமாள் புதுச்சேரிhttp://www.blogger.com/profile/09348935882490903193noreply@blogger.com9tag:blogger.com,1999:blog-3040317698000028196.post-82222316546008879102017-05-29T18:03:00.000+05:302018-07-08T07:12:27.908+05:30தோற்ற படங்களின் தோற்காத பாடல்கள்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
இசைப்பிரியர்களுக்கான அடுத்த பதிவு.தமிழ்த் திரையுலகில் மிகப்பெரிய நடிகர்களின் படங்கள் கூட சில நேரங்களில் மிக மோசமான தோல்வியைச் சந்தித்ததுண்டு..இயக்குனர் பாரதிராஜா, மணிரத்னம் போன்ற ஜாம்பாவான்கள் கூட மிகப்பெரிய சறுக்கல்களைக் கண்டதுண்டு..இதில் சாதாரண நடிகர்களின் படங்கள் தோற்பது ஒன்று ஆச்சரியம் இல்லை..அப்படி மொக்கை வாங்கிய சில படங்களில் ஒருசில பாடல்கள் மட்டும் மிகப்பெரிய வெற்றி அடைந்ததுண்டு..அப்படிப்பட்ட சூப்பர்ஹிட் பாடல்கள் டாப் 10 உங்களுக்காக..<br />
<br />
10. மலர்களே மலர்களே<br />
படம்: லவ் பேர்ட்ஸ்<br />
<br />
பிரபுதேவா, நக்மா இணைந்த இரண்டாவது படம்..காதலன் என்ற மிகப்பெரிய வெற்றிப் படத்திற்குப் பிறகு பிரபுதேவா பெரிய மொக்கை வாங்கிய படம்..அதுவும் இயக்குனர் பி.வாசுவின் படம்..ஆனால் பாடலோ சித்ராவின் குரலில் பெரிய ஹிட் ..நீங்களும் கேட்டுப் பாருங்கள்..<br />
<br />
9. இளவேனில் இது வைகாசி மாதம்<br />
படம் : காதல் ரோஜாவே<br />
<br />
இயக்குனர் கேயாரின் படம்..விஸ்வரூபம் ஹீரோயின் பூஜா குமார்தான் ஹீரோயின்..இளையராஜாவின் தேனிசையில் எஸ்.பி.பியின் மனம் மயக்கும் பாடல்.<br />
<br />
8. இளநெஞ்சே வா<br />
படம்: வண்ணவட்ணப் பூக்கள்<br />
<br />
இயக்குனர் பாலுமகேந்திராவின் படம்..பிரசாந்த் காட்டுக்கு சைக்கிள போய்க்கிட்டே பாடுவார்..ஜேசுதாஸ் குரலில் அருமையான பாடல்..படம்தான் பாக்க பொறுமை வேணும்..<br />
<br />
7. அடுக்குமல்லி எடுத்துவந்து<br />
படம்:ஆவாரம்பூ<br />
<br />
எஸ்.பி.பி ,ஜானகி குரலில் சூப்பர் ரொமாண்டிக் பாட்டு..நம்ம காதல்தேசம் ஹீரோ வினித் நடிச்ச படம்..படத்த பாத்து உங்களுக்கு ஏதாச்சும் ஆச்சுனா நான் பொறுப்பு இல்ல..<br />
<br />
6..சொல்லாயோ சோலைக்கிளி<br />
படம்: அல்லி அர்ஜுனா<br />
<br />
நம்ம பாரதிராஜா பையன் மனோஜ் நடிச்ச படம்..இரண்டாம் பாதியாச்சும் பரவால்ல..முதல் பாதி படம் பாத்தாலே மூச்சு போயிடும்..ஆனாலும் சொர்ணலதாவின் சுகமான குரலில் மனம் வருடும் காதல் பாடல்..<br />
<br />
5..குயிலுக்குப்பம் குயிலுக்கப்பம்<br />
<br />
படம்: என் உயிர்த் தோழன்<br />
<br />
இயக்குனர் பாரதிராஜாவின் படம் என்றால் யாரும் நம்ப மாட்டார்கள்.<br />
<br />
பத்து நிமிடத்துக்கு மேல தைரியம் இருந்தா பாருங்க இந்தப் படத்த..ஆனா மலேசியா வாசுதேவன் சித்ராவின் வித்தியாசமான குரலில் சூப்பரான பாடல்<br />
<br />
4. வருகிறாய் தொடுகிறாய்<br />
படம்: அஆ<br />
<br />
குஷி,வாலி போன்ற மாபெரும் வெற்றிப்படங்களைக் கொடுத்த S.J. சூர்யாவின் படம்..ஒழுங்கா அந்த வேலைய மட்டும் பாக்காம உன்ன யார்ரா நடிக்கலனு கேட்டது என்று எல்லோரும் கூறிய படம்..அவன் மூஞ்ச மறந்துட்டு பாட்ட மட்டும் கண்ண மூடிட்டுக் கேட்டுப் பாருங்க ..ஹரிஹரன் சித்ரா செமையா பின்னிருப்பாங்க..<br />
<br />
3..துளித்துளியாய்<br />
<br />
படம்: பார்வை ஒன்றே போதுமே<br />
<br />
குணால் மோனல் நடித்த படம்..படம் ஓடுச்சோ இல்லையோ பாட்டு சூப்பரா ஓடுச்சு..இசையமைப்பாளர் பரணியின் இசையில் சொர்னலதாவின் சுகமான கீதம்..<br />
<br />
2.கூடமேல கூடவச்சு.<br />
படம்: ரம்மி<br />
<br />
விஜய் சேதுபதிக்கு மொக்கை வாங்கிய படம்..இமான் இசையில் பாட்டு மட்டும் சூப்பர்ஹிட்..வந்தனா சீனிவாசனின் வசீகரக் குரலில் எத்தனை முறை கேட்டாலும் திகட்டாத பாடல்..<br />
<br />
1. திருடிய இதயத்தை<br />
படம்: பார்வை ஒன்றே போதுமே.<br />
<br />
மீண்டும் அந்த படம்..படம் வருடக்கணக்கில் ஓடிக் கேள்விப்பட்டிருப்போம்..ஆனால் வருடக்கணக்கில் ஓடிய பாடல் இந்தப் படத்தின் பாடல்கள்தான்..உன்னி, சித்ரா குரலில் உயிரை மயக்கும் பாடல்..எந்தப் பேருந்தில் ஏறினாலும் இந்தப்பாடல்தான் ஒலிக்கும் அந்தப் படம் வந்த காலகட்டத்தில்..பெரியண்ணா,சுந்தரா டிராவல்ஸ் படத்திற்குப் பிறகு அந்த இசையமைப்பாளர் காணாமலே போய்விட்டார்..ஆனாலும் இந்த ஒரு பாடலால் இன்னும் இசையுலகை ஆளுகிறார்.<br />
<br />
அடுத்த பதிவில் சந்திக்கும் வரை உங்கள் கலியபெருமாள்..</div>
கலியபெருமாள் புதுச்சேரிhttp://www.blogger.com/profile/09348935882490903193noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-3040317698000028196.post-26724229156565917682017-05-28T14:53:00.001+05:302017-05-28T16:49:52.205+05:30மருந்து உலகத்தின் மாயைகள்.<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
சமீபகாலமாக சமூக வலைதளங்களில் ஒரு செய்தி வைரலாக பரவிவருகிறது..பிராண்டட் மருந்துகளை நாம் அதிகவிலை கொடுத்து வாங்கி ஏமாறுவதாகவும் ஜெனிரிக் மருந்துகள் நமக்கு மிகக்குறைந்த விலையில் வாங்கமுடியும் என்ற செய்திதான் அது..இதில் என்ன கொடுமை என்னவென்றால் ஜெனிரிக் என்றால் என்னவென்றே தெரியாதவர்கள் கூட அதை forward செய்வதுதான்..பல்வேறு குப்பை செய்திகள் தினமும் Whatsapp ல் வருகின்றன. தயவுசெய்து உங்களுக்கு என்னவென்றே தெரியாத செய்திகளை தேவையில்லாமல் பகிராதீர்கள்..<br />
<br />
மருத்துவ உலகம் என்பது பல்வேறு மாயைகள் நிறைந்தது..தனி ஒருவன் படத்தில் காட்டுவதுபோல பல்வேறு திருட்டுத்தனங்கள் நிறைந்தது..உலகிலேயே அதிக மருந்து உற்பத்தி செய்யும் நாடுகளில் இந்தியா மூன்றாம் இடத்தில் உள்ளது..ஒரு வருடத்திற்கு 3 லட்சம் கோடிக்கும் மேல் வர்த்தகம் நடக்கும் ஒரு மிகப்பெரிய துறை..எய்ட்ஸ் நோய்க்கான மருந்துகள் இந்தியாவில்தான் 80 சதவீதம் தயாராகின்றன.<br />
<br />
மருந்து அட்டைகளில் மருந்துகளில் பெயரின் பக்கத்தில் IP, BP, USP என்று எழுதியிருப்பதைப் பார்த்துள்ளீர்களா? அது Indian pharmacology,British pharmacology ,United states pharmacology என்ற அந்தந்த நாட்டு காப்புரிமையைக் குறிக்கும்..ஒரு நாடு காப்புரிமை பெற்ற மருந்தைத் தயாரிக்க அந்த நாட்டுக்கு கோடிக்கணக்கில் பணம் கொடுத்துத்தான் நாம் மருந்தைத் தயாரிக்க முடியும்..அதன் பெயர்தான் பிராண்டட் மருந்துகள்..ஒரு குறிப்பிட்ட காலத்திற்கே அந்த பிராண்ட் பெயரில் நாம் தயாரிக்க முடியும்..அதன் பிறகு அந்த மருந்து கம்பெணியால் அதே பெயரில் மருந்து தயாரிக்க முடியாது..ஆனால் அதே மருந்தை வேறு பெயரில் தரம் குறையாமல் தயாரிப்பதே ஜெனிரிக் மருந்து என்று அழைக்கப்படுகிறது..நாங்க எதும் மொள்ளமாரித் தனம்லாம் பன்னல..அதே qualityயோடதான தயாரிச்சுருக்கோம் சொல்வாங்க..அதை food and drug administration என்னும் அமைப்பு OK சொல்லிட்டா போதும்..அவர்கள் ஜெனிரிக் மருந்துகளைத் தயாரிக்கலாம்.<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh6x5YwQmqwRWGUYDH7UW2lwCy6AJfagnwHWtdoEAkO_MpUgBY5xwtJhTjxRmA0FCyZX0wlvp2AuGqsVFYFfe9gH-VJbsNI9UBWGvyVOVtYW0MZwCxdOw2jpwmC64ymwSk6e9lWkuFqoOl2/s1600/DSC_0552.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="1200" data-original-width="1600" height="240" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh6x5YwQmqwRWGUYDH7UW2lwCy6AJfagnwHWtdoEAkO_MpUgBY5xwtJhTjxRmA0FCyZX0wlvp2AuGqsVFYFfe9gH-VJbsNI9UBWGvyVOVtYW0MZwCxdOw2jpwmC64ymwSk6e9lWkuFqoOl2/s320/DSC_0552.JPG" width="320" /></a></div>
நீங்கள் இன்டர்நெட்டில் தேடினாலும் ஜெனிரிக் மருந்துகளும் சிறந்தது என்றே காட்டும்..ஆனால் உண்மை அதுதானா என்றால் அங்கேதான் கொஞ்சம் கேள்விக்குறி..ஜெனிரிக் மருந்துகளால் நமக்கு லாபமோ இல்லையோ..மருந்துக்கடை காரர்களுக்கு கொள்ளை லாபம்..ஆம் ,பிராண்டட் மாத்திரை ஒரு அட்டை விற்றால் 5 ரூபாய் லாபம் கிடைக்கும் என்றால் அதே மருந்தை ஜெனிரிக் விற்றால் 20 ரூபாய் லாபம் கிடைக்கும்..நம்ம நாட்டு அதிகாரிகள பத்தி தெரியாதா? பணம் கொடுத்தா எதுல வேணும்னா கையெழுத்து போடுவாங்க..ஒன்றரை வருடம் மெடிக்கல வேல செஞ்சதுக்கே இவ்ளோ தெரிஞ்சு வச்சுருக்கன்..முழுசா தெரியாம ஜெனிரிக் மருந்துகளை நம்பி ஏமாறாதீர்கள்..இன்னும் கேவலமான quality ல தயாரிக்கிற ஒரு மருந்துகள் இருக்கின்றன.அதன் பெயர் commin medicines என்று கூறுகின்றனர்..கணக்கில் வராததை எல்லாம் சேர்த்தால் 5 லட்சம் கோடிக்கும் மேல் வியாபாரம் நடக்கும் சந்தை நம் இந்தியா..எளிமையாக ஏமாறுபவர்களும் நம் இந்தியர்கள்தான்...பிராண்டட், ஜெனிரிக் என்று குழப்பிக்கொள்வதை விட நோய் வராமல் ஜாக்கிரதையா பாத்துக்கோங்க உங்க உடம்ப.. பிராண்டட் மருந்துகளே ஒரு கம்பெணியைவிட வேறொரு கம்பெணியில் குறைந்த விலையில் கிடைக்கின்றன..அதை நம்பி வாங்கி சாப்பிடலாம்...CIMS என்ற புத்தகம் பெரிய புத்தகக் கடைகளில் கிடைக்கும்.அதில் அனைத்து கம்பெனிகளின் மருந்துகளும் விலையுடன் குறிப்பிடப்பட்டிருக்கும்.. நன்றியுடன் உங்கள் கலியபெருமாள்...</div>
கலியபெருமாள் புதுச்சேரிhttp://www.blogger.com/profile/09348935882490903193noreply@blogger.com6tag:blogger.com,1999:blog-3040317698000028196.post-34009978792611786682017-05-19T20:15:00.001+05:302017-05-19T20:15:41.610+05:30கால்கடுக்க நிற்பவர்களுக்கு கைகொடுப்போம்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
உலகில் பலவிதமான வேலைகள் செய்பவர்களைத் தினந்தோறும் பார்க்கிறோம்..சில வேலைகள் எளிமையாகவும் சிலர் கடினமான வேலைகளைச் செய்துதான் மூன்று வேளை சாப்பிட வேண்டியிருக்கிறது...ரோடுபோடும் பணியாளர்களைப் பார்த்து பலமுறை வருந்தியிருக்கிறேன்..இன்று இப்பதிவில் நீண்டநேரம் நின்றுகொண்டே வேலைசெய்யும் பணியாளர்களையும் அவர்கள் படும் இன்னல்களையும் பற்றியுமே உங்களுடன் பகிர விரும்புகிறேன்..தனியார் கம்பெனிகளில் வேலை செய்பவர்கள், ஜவுளிக்கடை ஊழியர்கள், சலூன் ஊழியர்கள் போன்றோர் ஒருநாளைக்கு 8 மணி நேரம் நின்றபடியே வேலைசெய்யும் அவலம் இன்னமும் இருக்கிறது..அதனால் அதில் 25 சதவீதம் பேர் VERICOSE VEIN என்னும் நரம்புச் சுருட்டல் நோயினால் பாதிப்புக்குள்ளாகின்றனர்..<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj3GE1ak8cx0b6SOyuu2DEJe1HXGLUf2LoYR4aDl4aNF_xv3IR60m4fiT4m4Bl6k6rn_d1vXjf3TvGursYZDEP21d2Dnnt50zsoG9ch3Yasn53TiSbFKf0HhW5gl4ppN9_b1PxI7lsZpLWI/s1600/varicose-vein-3-638.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj3GE1ak8cx0b6SOyuu2DEJe1HXGLUf2LoYR4aDl4aNF_xv3IR60m4fiT4m4Bl6k6rn_d1vXjf3TvGursYZDEP21d2Dnnt50zsoG9ch3Yasn53TiSbFKf0HhW5gl4ppN9_b1PxI7lsZpLWI/s1600/varicose-vein-3-638.jpg" /></a></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
அவர்கள் எந்த பாவமும் செய்து இவ்வாறு ஆகவில்லை..நீண்டநேரம் நிற்பதால் ரத்த ஓட்டம் மேலே செல்ல இயலாமல் கால் நரம்புகள் சுருட்டிக் கொள்கின்றன..இதை சாதாரண பிரச்சனையாக நினைக்க வேண்டாம்..வருடத்திற்கு 40 லட்சம் பேர் இப்பிரச்சனையால் பாதிக்கப்படுவதாக மருத்துவ அறிக்கைகள் தெரிவிக்கின்றன..பத்து வருடமாக கம்பெனியில் நின்றுகொண்டே பணிபுரிவதால் என் அண்ணன் கூட இப்பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ளார்..நான் டிப்ளமோ படித்துவிட்டு ஒருவருடம் மெடிக்கலில் வேலைசெய்த போது எதிரில் இருந்த சலூன்கடை அண்ணன் ஞாயிற்றுக் கிழமைகளில் சாப்பிடக்கூட நேரமின்றி நீண்டநேரம் வேலைசெய்வதைப் பார்க்கும்போதுதான் அவர்கள் படும் கஷ்டத்தை உணரமுடிந்தது..அவர்கள் எளிமையாக சம்பாதிப்பதாக நம்மில் பலர் நினைத்துக் கொண்டிருக்கிறோம்..</div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
அதுக்காக எங்கள என்னடா பன்ன சொல்ற என்று நீங்கள் கேட்பது புரிகிறது..இப்பிரச்சனையை சமூக ஆர்வலர்களிடமும் அரசியல்வாதிகள் பார்வைக்கும் எடுத்துச் செல்லவேண்டும்..தனியார் நிறுவனங்களில் நீண்ட நேரம் நின்றுகொண்டே வேலை செய்வதைத் தடுக்க ஏதேனும் சட்ட விதிமுறைகள் உருவாக்கப்பட வேண்டும். நாளை நாமும் பாதிக்கப்படலாம்..எத்தனையோ அறிவியல் கண்டுபிடிப்புகள் வந்துவிட்டன..ஏன் நகரும் வகையில் உயரம் மாற்றும் வகையிலான நாற்காலிகள் உருவாக்க முடியாதா? அதிலுள்ள நிறைகுறைகளை விவாதிப்போம்..சலூன்கடை காரர் ஏன் அமர்ந்துகொண்டே முடிவெட்ட முடியாது? அடுத்த ஆண்டு அறிவியல் கண்காட்சியில் இதற்கான தீர்வாக ஏதேனும் காட்சிப்பொருள் உருவாக்கி விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று நினைத்திருக்கிறேன்..நண்பர்கள் யாரேனும் செய்தாலும் மகிழ்ச்சியே..வாழ்நாள் முழுதும் சிகிச்சை,அறுவைசிகிச்சை மூலம் கூட இதை முழுமையாகக் குணப்படுத்த முடியாது என்பதாலேயே இவ்வளவு முக்கியத்துவம் கொடுத்து எழுதியுள்ளேன்.. முடிந்தவரை நண்பர்களுக்கு பகிருங்கள்.நன்றியுடன் உங்கள் கலியபெருமாள்.</div>
</div>
கலியபெருமாள் புதுச்சேரிhttp://www.blogger.com/profile/09348935882490903193noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-3040317698000028196.post-18816032887953692192017-05-14T22:37:00.001+05:302017-05-19T15:18:42.438+05:30அட்டகாசமான அஜித் பாடல்கள்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
இசைப்பதிவு எழுதி ரொம்ப நாளாச்சு..நம்ம தல அஜித் பிறந்தநாள் பதிவாக எழுதவேண்டும் என்று நினைத்திருந்தேன்.ஆனால் கொஞ்சம் லேட் ஆயிடுச்சு..அஜித் ரசிகர்களுக்கு இம்மாதம் முழுவதுமே தல பிறந்தநாள்தான்..நான் முதல் நாள் முதல் ஷோ பார்க்கும் தீவிர ரசிகனெல்லாம் இல்லை..ஆனால் அஜித் மீது ஒரு ஈர்ப்பு ஏற்பட்டது வீரம் படத்திற்குப் பிறகுதான்..<br />
<br />
இப்பதிவில் அஜித்தின் டாப் 10 பாடல்களை வரிசைப்படுத்தியுள்ளேன்..அஜுத் ரசிகர்கள் பலரே அவரது படத்தில் பாடல்கள் எதுவும் பெரிய அளவில் ஹிட்டாகவில்லை என்று நினைக்கின்றனர்..அது ஒரு மாயை..உண்மையில் அஜித் படங்களில் பல சூப்பர்ஹிட் பாடல்கள் உள்ளன..எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல்கள் பத்து மட்டும் பட்டியலிட்டுள்ளேன்..<br />
<br />
1..தாஜ்மகால் தேவையில்லை,..<br />
படம் : அமராவதி<br />
அஜித்தின் முதல் படம். படம் பெரிய வெற்றி அடையாவிட்டாலும் இன்றளவும் நெஞ்சைவிட்டு நீங்கா பாடல்..SPB, ஜானகி குரலில் மனதை வருடும் அருமையான பாடல்..<br />
<br />
2. புத்தம்புது மலரே<br />
படம்: அமராவதி.<br />
ஒரே படத்தில் இரண்டு பாடல் வேண்டாம் என்று நினைத்தேன்..ஆனால் இந்த பாடல் இல்லாமல் இப்பதிவு நிறைவடையாது..தினம் தினம் கேட்டாலும் மனம் மனம் ரசிக்கும் பாடல் ..<br />
<br />
3.நலம் நலம் அறிய ஆவல்<br />
படம்:காதல் கோட்டை<br />
அஜித்திற்கு மிகப்பெரிய திருப்புமுனையான படம். இயக்குநர் அகத்தியனுக்கு தேசியவிருதைப் பெற்றுத்தந்த படம்..தேவாவின் இசையில் அனைத்து பாடல்களுமே ஹிட்..ஆனால் இந்தப் பாடல் கொஞ்சம் ஈர்ப்பு அதிகம்..<br />
4. மீனம்மா<br />
படம்: ஆசை.<br />
அஜித்தின் மற்றுமொரு மாபெரும் வெற்றிப்படம்..சொக்கவைக்கும் சொர்ணலதா ,உன்னி குரலில் கிரங்கடிக்கும் கீதம்.<br />
5. உனைப்பார்த்த பின்புநான்<br />
படம்: காதல் மன்னன்<br />
அஜித், இயக்குனர் சரண் combo வில் முதல் படம்..பரத்வாஜ் இசையில் நம்ம SPB உயிரக் கொடுத்துப் பாடியிருப்பார்..<br />
<br />
6. சத்தம் இல்லாத தனிமை கேட்டேன்.<br />
படம்: அமர்க்களம்.<br />
தல யின் 25 ஆவது படம்.. அஜித் -சரண் இணைந்த இரண்டாவது படம்..SPB மூச்சு விடாமல் பாடிய சாதனை பாடல்..நம்ம தல ஷாலினியை இணைத்த படம்..<br />
<br />
6. சந்தனத் தென்றலை<br />
படம்: கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்.<br />
<br />
அஜித்திற்கு பெரிய வெற்றிப்படமாக அமையாவிட்டாலும் ஏ.ஆர் ரகுமான் இசையில் சங்கர் மகாதேவன் பாடிய இந்த பாடலுக்கு தேசிய விருது தேடிவந்தது..<br />
7. சொல்லாமல் தொட்டுச்செல்லும் தென்றல்<br />
படம்: தீனா<br />
இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸின் முதல் படம்..ஹரிஹரனின் சிறந்த 10 பாடல்கள் தேர்ந்தெடுத்தால் அதில் நிச்சயம் இப்பாடலும் இடம்பெறும்..தல என்ற பட்டப்பெயரைக் கொடுத்த படம்..<br />
<br />
8. அக்கம் பக்கம் யாருமில்லா.<br />
படம்: கிரீடம்.<br />
<br />
படம் வெற்றியடையாவிட்டாலும் பாடல்கள் சூப்பர்ஹிட்டான படம்..ஜி.வி.பிரகாஷ் சிறந்த இசையமைப்பாளர் என்பதற்கு இந்த ஒரு பாடல் போதும்..இரவில் கேட்டால் இதயம் வருடும்..<br />
<br />
9.காற்றில் ஓர் வார்த்தை<br />
படம்: வரலாறு<br />
<br />
மூன்று தோற்றத்தில் தோன்றி வரலாறு படைத்த படம்..SPB .சாதனா சாகம் குரலில் மனம் வருடும் மற்றுமொரு பாடல்..<br />
10. ஆலுமா டோலுமா.<br />
படம்: வேதாளம்.<br />
<br />
இப்பாடல் பட்டியலில் இடம் பிடிக்க முக்கிய காரணம்..தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் dance show களில் இந்த பாடல் இடம்பெறாமல் சத்தியமாய் இருக்க முடியாது..அனிருத்தின் இசையில் அனைவரையும் ஆடவைத்த பாடல்..படம் வருவதற்கு முன்பே இந்த பாடல் வந்து செக்க போடு போட்டாலும் அஜித்திற்கு இதுபோன்ற பாடல் செட்டாகுமா என்றொரு சந்தேகம் எனக்குள் இருந்தது..ஆனால் படம் பார்த்தபிறகு அஜித்திற்கு மட்டுமே இப்பாடல் செட்டாகும் என்று புரிந்தது..<br />
<br />
தூக்கம் வந்துடுச்சு..அடுத்த பதிவில் சந்திக்கும் வரை உங்கள் கலியபெருமாள்..<br />
<blockquote class="tr_bq" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiIX-DsR6L8UKAfy0ENwe3iZJDgNGAEiX71FgKnuFlitnDt4yadlDg1jXA5PPqggzqbz_4fU1o9ErzmQlNXOf4pAKj2CNxHb5tRHxCg6RlplSAqIMPbhvlU03lt3LGMPTgha72r2Z1Ul0JJ/s1600/download.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiIX-DsR6L8UKAfy0ENwe3iZJDgNGAEiX71FgKnuFlitnDt4yadlDg1jXA5PPqggzqbz_4fU1o9ErzmQlNXOf4pAKj2CNxHb5tRHxCg6RlplSAqIMPbhvlU03lt3LGMPTgha72r2Z1Ul0JJ/s1600/download.jpg" /></a></blockquote>
</div>
கலியபெருமாள் புதுச்சேரிhttp://www.blogger.com/profile/09348935882490903193noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3040317698000028196.post-55450342245033028272017-04-27T21:51:00.000+05:302017-04-29T10:06:07.767+05:30பெண்ணியம் பேசலமா கொஞ்சம்? <div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
சமீபத்தில் ஆசிரியர்களின் வாசகர் வட்டத்தில் நடைபெற்ற வாசிப்பு முகாமில் பெண்மை என்றொரு கற்பிதம் என்ற புத்தக விமர்சனம் நடந்தேறியது..அதில் அனைவருமே ஆண் சமூகம் முழுக்க குற்றவாளிகளாக சித்தரிக்கப்பட்டனர்..என்னுடைய கருத்துக்களைக் கூறலாம் என்று நினைத்தேன்..ஆனால் என்னைப் பெண்ணியத்திற்கு எதிரானவன் என்று நினைத்து விடுவார்கள் என்றுதான் பேசவில்லை..<br />
<br />
எந்தவொரு மாற்றமும் ஒரே நாளில் நிகழ்ந்து விட முடியாது..நிச்சயம் ஒருநாள் சமத்துவ சமுதாயம் உருவாகும்..<br />
அதற்குமுன் அனைத்து ஆண்களையும் ஆணாதிக்கவாதிகளாக பார்க்கும் பெண்களிடம் சில கேள்விகளை முன்வைக்கிறேன்..<br />
1. எத்தனை பெண்கள் உங்கள் கணவரின் சொத்தில் சரிபாதி பங்கை உங்கள் நாத்தனாருக்கு எழுதிக் கொடுக்க முழுமனதுடன் சம்மதிப்பீர்கள்.?.<br />
2.எத்தனை பெண்கள் உங்கள் ஏழு வயது மகனுக்கு கோலம் போட கற்றுக் கொடுத்துள்ளீர்கள்..?<br />
3.எத்தனை பெண்கள் உங்கள் தம்பி வீட்டுக்கு செல்லும்போது உங்கள் நாத்தனாரை உட்கார வைத்துவிட்டு உங்கள் தம்பி வீட்டுவேலை செய்வதை ரசித்துப் பார்த்திருக்கிறீர்கள்.?<br />
4.உங்களில் எத்தனை பேர் உங்கள் மாமியாருக்கு தீபாவளிக்கு இரண்டாயிரம் ரூபாய்க்கு புடவை எடுத்துக் கொடுத்துள்ளீர்கள்.?<br />
5.எத்தனை பெண்கள் உங்கள் மகனுக்கு குணத்தில் மட்டும் அழகான பெண்ணை மணம் முடிக்க தயாராய் இருக்கிறீர்கள்?<br />
6..இன்னும் பல கேள்விகள் மனதினுள்ளே...மொபைலில் அதிகம் எழுதமுடியவில்லை..நான் பெண்ணியத்திற்கு எதிரானவன் அல்ல..ஆண்கள் மட்டும் அவ்வாறு வளர்க்கப்படவில்லை..பெண்களும் இந்த சமூகத்தில் அவ்வாறுதான் வளர்க்கப்பட்டுள்ளனர்..<br />
ஆண்களை எதிரிகளாக பார்ப்பதை விட்டுவிட்டு அடுத்த தலைமுறை குழந்தைகளை சரிசமமாக வளர்க்க முயல்வோம்..முடிந்தால் சமையல் கற்றுக் கொடுக்கத் தொடங்குங்கள் உங்கள் ஆண் குழந்தைக்கு..நிச்சயம் எதிர்மறை விமர்சனங்கள் வரும் என்ற எதிர்பார்ப்புகளோடு உங்கள் கலியபெருமாள்..</div>
கலியபெருமாள் புதுச்சேரிhttp://www.blogger.com/profile/09348935882490903193noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3040317698000028196.post-4479299419840992202017-04-13T22:28:00.000+05:302017-04-13T22:28:38.136+05:30இந்திய மாநிலங்களின் பெயர்கள் கற்பித்தல்-சிறுமுயற்சி<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<object id="BLOG_video-UPLOADING-0" class="BLOG_video_class" contentid="UPLOADING" width="320" height="266" ></object></div>
பதிவுலகம் பக்கம் தலைகாட்டி பலமாதங்கள் ஆகிவிட்டன..கழுத்துவலி மற்றும் பணிச்சுமையால் எழுதமுடிவதில்லை..என் வகுப்பறை அனுபவத்தைப் பகிரவே இப்பதிவு..இந்திய மாநிலங்களின் பெயர்களைக் கற்பிக்க முயன்றேன் இரண்டு வாரங்களுக்கு முன்..நமக்குத் தெரியும் என்பதால் மாணவர்களும் இரண்டு நாட்களில் கற்றுக்கொள்வார்கள் என்று நினைத்து ஏமாந்து போனேன்..மாநிலங்களில் பெயர்களை உச்சரிக்கவே மிகவும் சிரமப்பட்டனர்..என்ன செய்யலாம் என்று யோசித்தபோதுதான் எனக்குத் தெரிந்த ஒரேவித்தை பாடலைத் தேர்ந்தெடுத்தேன்..அதில் வெற்றியும் அடைந்துவிட்டேன்..இப்பொழுது இந்திய வரைபடத்தில் எந்த மாநிலத்தின் பெயரைக் கூறினாலும் சரியாகக் காட்டிவிடுகின்றனர் நொடிப்பொழுதில்..உங்கள் ஆசிரிய நண்பர்களுக்குப் பகிருங்கள்..என்னுடைய இந்த சிறுமுயற்சி யாருக்கேனும் பயன்பட்டால் மிக்க மகிழ்ச்சி..மாநிலங்களின் தலைநகரோடு பாடலாகக் கூற முயற்சிக்கிறேன் விரைவில். நன்றிகளுடன் உங்கள் கலியபெருமாள்...<a href="https://youtu.be/bN6YKe4arec" target="_blank">https://youtu.be/bN6YKe4arec</a></div>
கலியபெருமாள் புதுச்சேரிhttp://www.blogger.com/profile/09348935882490903193noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-3040317698000028196.post-56342422577243653182016-04-10T19:32:00.000+05:302016-04-10T20:57:39.731+05:30சில்லறை வணிக அரசியலைத் தடுப்போம்.<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
நீண்ட காலத்திற்குப் பிறகு பதிவுலகம் பக்கம் தலை காட்டுகிறேன்.அனைவருக்கும் வணக்கம். சமீபத்தில் தோழி பிரியா அவர்களின் பதிவில் சில்லரை வணிக அரசியல் பற்றி கோபமாக சாடியிருந்தார்..ஆம் அவர் கூறியது அனைத்தும் உண்மையே..தினம் தினம் நாம் ஒவ்வொருவரும் கேட்கத் திராணியின்றி ஏமாந்து கொண்டிருக்கிறோம். இன்று கூட வீட்டிற்கு அருகிலுள்ள பேக்கரியில் பால் வாங்கியபோது மீதி சில்லரை கொடுக்காமல் சாக்லேட் கொடுத்து ஏமாற்றுகின்றனர்..நாம் கேள்வி கேட்டால் நீங்கள் சில்லரையாகக் கொடுங்கள் என்பதாக இருக்கும்.அல்லது நம்மை கேவலமாக ஒரு பார்வ பார்ப்பார்கள். நம்முடைய ஆதங்கமெல்லாம் நம்மை ஒரு வார்த்தை கூட கேட்காமல் நமது பணத்தை எடுக்க அவர்களுக்கு யார் உரிமை தந்தது.இன்று ஐந்து ரூபாய் கூட மதிப்பில்லாத சில்லரையாகி விட்டது.அஞ்சு ரூபா சில்லரை இல்ல ஏதாச்சும் வாங்கிங்கோங்க என்கிறார்கள்.தரமான பொருளைக் கொடுத்தாலும் பரவாயில்லை.கம்பெனி பெயரே தெரியாத வீணான பொருள்தான் சில்லரைக்குப் பதில் கொடுக்கப்படுகிறது.பல இடங்களில் சில்லரை இருந்தால் கூட கொடுப்பதில்லை.காய்கறிக்கடை ,மளிகைக்கடை ,பால் வாங்கும் இடம், திண்பண்டக்கடைகள் என்று ஒவ்வொரு இடத்திலும் சில்லரை கொடுக்கப்படாமல் நம் பணம் சுரண்டப்படுகிறது.ஒரு காலத்தில் இதைக்கண்டு போகும் இடத்திலெல்லாம் மனதிற்குள் கோபப்பட்டுதான் வீட்டிற்கு வருவேன்.ஆனால்இப்போதெல்லாம் எங்கு சென்றாலும் பாக்கெட்டில் பத்து ரூபாய் சில்லரையோடுதான் செல்கிறேன்.அவர்கள் சாக்லேட் கொடுப்பதற்கு முன் நான் சில்லரையைக் கொடுத்து விடுகிறேன். நம் பணத்தை நாம்தான் காப்பாற்றிக் கொள்ள வேண்டும்.நமக்கே இப்படி இருக்கிறது என்றால் ஒருநாளைக்கு வெறும் ஐந்து ரூபாய்க்கெல்லாம் கஷ்டப்பட்டு வேலை செய்த நம் முன்னோருக்கு எப்படி இருக்கும்..இனி கடைக்குச் செல்லும்போது சில்லரைக் காசோடு செல்வோம்.சில்லறை வணிக அரசியலைத் தடுப்போம். கஷ்டப் பட்டு உழைத்து சம்பாதிப்பவர்கள் நிச்சயமாக யோசிப்பீர்கள் என்று நம்புகிறேன். பின்னூட்டத்தில் விரிவாக அலசுவோம்.அன்புடன் உங்கள் கலியபெருமாள்...</div>
கலியபெருமாள் புதுச்சேரிhttp://www.blogger.com/profile/09348935882490903193noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-3040317698000028196.post-18223051371549299862015-06-05T20:12:00.001+05:302015-06-05T20:12:09.878+05:30ஏழைகள்தான் ஏமாந்தவர்களா ?<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
பதிவுலகம் பக்கம் வந்து பலகாலமாகி விட்டது..நீண்ட நாட்களாக நெஞ்சில் இருக்கும் கோபத்தின் வெளிப்பாடுதான் இப்பதிவு..<br />
<br />
ஆம்..தொடர்ச்சியாக ஏழைகள் மீதே அனைத்து சுமைகளையும் வைக்கிறது ஒவ்வொரு அரசாங்கமும்...எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் இதே நிலைதான் நீடிக்கிறது..<br />
<br />
மத்திய அரசின் பல்வேறு நிறுவனங்களில் இருக்கும் பல்வேறு காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக அடிக்கடி செய்தித்தாள்களிலும் ஊடகங்களிலும் பல்வேறு அறிவிப்புகள் வருவதை நாம் பார்த்திருப்போம்...<br />
வங்கித்தேர்வுகள் கூட அடிக்கடி நடத்தப்பட்டு ஆட்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள்...<br />
<br />
இவையெல்லாம் நல்ல விஷயம்தான்...ஆனால் பிரச்சனை ஆரம்பிக்கும் இடம் விண்ணப்பக் கட்டணம் ,தேர்வுக்கட்டணம் என்ற பெயரில் ரூபாய் 500 முதல் 1000 வரை கட்டச்சொல்லுகின்ற அநியாயம் இருக்கிறதே அதுதான் கொடுமையிலும் கொடுமை...<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://www.andhrawishesh.com/media/k2/items/cache/287c4cc1410d99dc70f545047e61f406_L.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="http://www.andhrawishesh.com/media/k2/items/cache/287c4cc1410d99dc70f545047e61f406_L.jpg" height="295" width="400" /></a></div>
வேலையில்லாமல் தவிக்கும் ஏழைகள்தான் பாதிபேர் இத்தகைய தேர்வுகளை எழுதுகின்றனர்..அவர்கள் இருக்கும் நிலைமையில் ஒவ்வொரு வேலைக்கும் 500, 1000 என்று கட்டச் சொன்னால் அவர்கள் எங்கே போவார்கள்.<br />
<br />
திறமை இருக்கும் பல்வேறு மாணவர்கள் பணம் கட்ட இயலாமலே இத்தகைய தேர்வுகளுக்கு விண்ணப்பிப்பதே இல்லை..பெண்களுக்கு மட்டும் ஒரு சில வேலைகளுக்கு தேர்வுக்கட்டணம் கட்டத்தேவையில்லை என்பது கொஞ்சம் ஆறுதல்....மக்கள் திருந்திவிட்டார்கள் ...அரசாங்கம்தான் சாதி மத பேதத்தை மக்கள் மனதில் விதைக்கிறது...<br />
<br />
கோடி கோடியாய் தொழில் தொடங்கவும் மானியமாகவும் கோடீசுவரர்களுக்கு கொட்டிக்கொடுக்கும் இந்த அரசாங்கம் வேலை தேடி அலையும் ஏழைகளின் வயிற்றில் ஏன் அடிக்க வேண்டும்...ஏன் எந்த அரசியல்வாதியும் இதைக் கேட்பதில்லை என்று தெரியவில்லை...<br />
<br />
பத்து வருடங்களுக்கு முன் நான் எப்படியோ படித்து பத்து பைசா செலவில்லாமல் இந்த ஆசிரியர் பணிக்கு வந்துவிட்டேன்...ஆனால் என்னைப்போல ஏழைக்குடும்பத்தில் பிறந்த எத்தனையோ பேர் திறமையிருந்தும் அரசாங்கத்தின் இதுபோன்ற அநியாயங்களால் வேலையில்லாப் பட்டதாரிகளாகவே அலைந்து கொண்டிருக்கின்றனர்...<br />
<br />
இளைஞர்கள் அரசாங்கத்தை எதிர்பார்க்காமல் சொந்தமாக தொழில்தொடங்கலாம் என்று பார்த்தால் கூட எந்த வங்கியில் மனிதனை நம்பி கடன் தர தயாராயிருக்கிறார்கள்...<br />
<br />
குறைந்தபட்சம் வறுமைக்கோட்டுக்குக் கீழுள்ளவர்களுக்கு மட்டுமாவது இலவசமாக தேர்வெழுத அனுமதிக்கலாம்...அரசாங்கம் மாறுவது முக்கியமல்ல...அரசின் மனம் மாறவேண்டும்...படிக்காமல் இருந்திருந்தாலவது ஏதாவது அப்பன் செய்த குலத்தொழிலையோ விவசாயம் செய்தோ வருமானத்திற்கு வழி செய்திருப்பர். அனைவருக்கும் கல்வி என்று அறைகூவல் விடுத்து வீட்டிற்கு ஒரு என்ஜினியரையும் பட்டதாரியையும் உருவாக்கி வைத்துவிட்டீர்கள்.. ஆனால் வேலைக்கோ பணமிருக்கும் பணக்காரர்கள் மட்டுமே எத்தனை முறை வேண்டுமானாலும் பணம் கட்டி தேர்வெழுதுகிறார்கள்...<br />
<br />
எங்கள் ஊரில் பத்தாம் வகுப்பில் முதல் மதிப்பெண் எடுத்த மாணவன் ஒருவன் பட்டப்படிப்பை முடித்துவிட்டு அவன் அப்பா இறந்துவிட்டதால் குடும்ப பாரத்தை தன் தலையில் சுமந்து கொண்டு ரூ 7000 சம்பளத்தில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்கிறான்...இதைப்போன்ற கோடிக்கணக்கான ஏழை திறமைசாலிகள் இந்தியாவில் இருக்கிறார்கள்..<br />
.ரூ 7000 சம்பளத்தில் அவன் குடும்பத்தை நடத்துவதா அல்லது ஒவ்வொரு அரசுத்தேர்வுக்கும் ஆயிரம் கட்டுவதா....சிந்திப்பார்களா தெரியவில்லை அரசியல்வாதிகள்...ஏழைகளையும் கொஞ்சம் ஏறெடுத்துப் பாருங்கள்.....<br />
<br />
<br /></div>
கலியபெருமாள் புதுச்சேரிhttp://www.blogger.com/profile/09348935882490903193noreply@blogger.com7tag:blogger.com,1999:blog-3040317698000028196.post-12293527864820740702014-11-23T11:00:00.003+05:302014-11-23T11:00:40.345+05:30வரம் தந்த சாமிக்கு<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
நீண்ட நாள்களுக்குப் பிறகு பதிவுலகம் பக்கம் தலைகாட்டுகிறேன்...நாள்கழித்து வந்தாலும் புதுதெம்போடு புத்துணர்ச்சியோடு உங்களையெல்லாம் மீண்டும் சந்திப்பதில் மிகுந்த மகிழ்ச்சி...ஆனந்தக் கூத்தாடும் அளவுக்கு மகிழ்ச்சியில் திளைத்திருக்கிறேன் என்றுதான் சொல்லவேண்டும்...இதற்கு மேலும் சஸ்பென்ஸ் சரியல்ல....மூன்று நாட்களுக்கு முன்னர் (20.11.2014) என் மனைவி ஒரு அழகான பெண்குழந்தையை ஈன்றெடுத்திருக்கிறாள்...<br />
<br />
ஒருநாள் இரண்டுநாள் அல்ல நான்கு ஆண்டுகள் காத்திருக்க வைத்தாலும் நாங்கள் ஆசைப்பட்டபடி பெண்குழந்தை பிறந்ததில் இரட்டிப்பு மகிழ்ச்சி..ஆண்டவன் நல்லவர்களைச் சோதித்தாலும் கைவிடுவதில்லை என்ற வரிகளை நினைத்து மகிழ்ச்சியில் இருக்கிறேன்....<br />
<br />
இத்தனைக்கும் ஒரு வருடத்திற்கு முன்னரே பெயரெல்லாம் கூட முடிவு செய்துவிட்டோம் பெண் குழந்தைதான் பிறக்கும் என்ற நம்பிக்கையில்...என் உடன்பிறந்தவர்கள் இரண்டு அண்ணன்கள்...அண்ணன்கள் இரண்டு பேருக்கும் ஆண்குழந்தைகளே...அதனால்தான் பெண்குழந்தை மேல் அவ்வளவு பிரியம்...கருவில் உருவான போதே அவளுக்கு ஷிவானி என்று பெயர் சூட்டிவிட்டோம்...<br />
<br />
சுவாதி நட்சத்திரத்தில் பிறந்ததால் ரா, ரே, ரோ போன்ற எழுத்தில்தான் பெயர் வைக்க வேண்டும் என்று கூறிவிட்டார்கள்...ஷிவானி என்ற பெயர் எங்களுடனே பத்து மாதங்களாக வாழ்ந்துவிட்டது...திடீரென்று அந்த பெயரை மாற்றிவிட்டு வேறொரு பெயரைச்சூட்ட மனம் ஏற்கவில்லை...எனவே ராகஷிவானி என்று பெயர் வைத்திருக்கிறேன்...<br />
<br />
இந்த மகிழ்ச்சியான தருணத்தை உங்களோடு பகிர்ந்துகொள்ளவே இந்த பதிவு...மூன்று நாட்களாக மருத்துவமனைக்கும் வீட்டுக்கும் அலைந்ததால் அன்றே பதிவிட முடியவில்லை.....<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://www.asrilanka.com/wp-content/uploads/2013/01/child.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="http://www.asrilanka.com/wp-content/uploads/2013/01/child.jpg" height="256" width="400" /></a></div>
இன்று நான் மகிழ்சியாக இருந்தாலும் குழந்தை பாக்கியம் இல்லாத என்னுடைய மனக்கஷ்டங்களை பல நேரங்களில் உங்களோடு பகிர்ந்திருக்கிறேன்...அப்போதெல்லாம் எனக்கு ஆறுதலும் நம்பிக்கையும் ஊட்டிய பதிவுலக நண்பர்கள் அனைவருக்கும் இப்பதிவைக் காணிக்கையாக்கி அவர்களுக்கு என்னுடைய மகிழ்ச்சி கலந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.....<br />
<br />
எல்லாருக்கும் நல்ல காலமுண்டு நேரமுண்டு வாழ்விலே என்ற மறுபடியும் பட பாடல் பின்புலத்தில் ஒலிக்கிறது.....நன்றி...அடுத்த பதிவில் சந்திக்கிறேன்...(மனைவி மூனு மாசத்துக்கு அம்மா வீட்ல இருப்பாங்க இல்ல அந்த நம்பிக்கைதான்....குழந்தையோடு கொஞ்சவே நேரம் சரியாக இருக்கும் என்று நினைக்கிறேன்...முடிந்தவரை பதிவுலகம் பக்கம் வர முயற்சிக்கிறேன்...தயவுசெய்து வந்துடாத என்று நீங்கள் சொல்வது என் காதுகளில் கேட்கிறது.......)</div>
கலியபெருமாள் புதுச்சேரிhttp://www.blogger.com/profile/09348935882490903193noreply@blogger.com5tag:blogger.com,1999:blog-3040317698000028196.post-44330584825789913392014-05-30T19:01:00.001+05:302014-05-30T19:01:59.375+05:30மலரும் நினைவுகள்-எங்கள் பள்ளியின் ஆண்டுவிழா கொண்டாட்டம்..<iframe allowfullscreen="" frameborder="0" height="270" src="//www.youtube.com/embed/DoajJYWQvvg" width="480"></iframe>கலியபெருமாள் புதுச்சேரிhttp://www.blogger.com/profile/09348935882490903193noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3040317698000028196.post-23306004706045117212014-01-26T07:30:00.001+05:302016-03-12T20:49:25.913+05:30நான்கு வயது குழந்தை கதைசொல்லும் அழகைப் பாருங்கள்...<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<iframe allowfullscreen="" frameborder="0" height="270" src="//www.youtube.com/embed/hPR97b-JuK4" width="480"></iframe></div>
கலியபெருமாள் புதுச்சேரிhttp://www.blogger.com/profile/09348935882490903193noreply@blogger.com3