Sunday 31 December 2017

போதையில்லாத புத்தாண்டு வேண்டும்!!?

புத்தாண்டை எண்ணி புலகாங்கிதம் அடையமுடியவில்லை... புதுவசந்தம் வந்ததென்று புன்முறுவல் பூப்பதில்லை..

புத்தகச் சுமையில்லா பள்ளி என்று வருமோ,
 புகையில்லாத காற்று என்று இருக்குமோ,

போதையில்லா சமூகம் என்று தோன்றுமோ,

புழுதி இல்லாத சாலைகள் உருவாகுமோ,

புரிதலுடன் குடும்பங்கள் என்று இணையுமோ,

புதுமைகளைப் படைக்க இளைஞர்கள் என்று புறப்படுவார்களோ,

பொதுவுடைமைக்காக புரட்சிகள் உதயமாகுமோ,

பூசல் இல்லாமல் மாநிலங்கள் ஆகுமோ,

பூரணமான புத்தாண்டு அன்றுதான் என் தேசத்திற்கு...

இருந்தாலும் என்றாவது ஒருநாள் என் தேசம் முன்னேறிவிடும் என்று வாழும் நேர்மறை மனிதர்களுக்காக என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்..

6 comments:

  1. என்றாவது ஒரு நாள் என் தேசம் முன்னேறும் - அந்த நம்பிக்கை தான் நம்மை செலுத்திக் கொண்டிருக்கிறது.

    வாழ்த்துகளுக்கு நன்றி.

    தங்களுக்கும் தங்களது குடும்பத்தினருக்கும் மனம் நிறைந்த புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
  2. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!!

    ReplyDelete
  3. உங்கள் மன ஏக்கம் பூர்த்தி ஆக நானும் காத்திருக்கிறேன் தங்களுக்கு இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. புத்தாண்டு வாழ்த்துக்களும் நன்றியும்..தோழி.

      Delete