Saturday 3 March 2018

கடன் அட்டை ( credit card ) வரமா? சாபமா?

கடன் அட்டை பயன்படுத்துபவர்களுக்காக அல்ல இப்பதிவு..அதைப்பற்றி அறிமுகம் இல்லாதவர்களுக்கு இப்பதிவு உதவும் என்று நினைக்கிறேன்.. கடன்பட்டார் நெஞ்சம்போல கலங்கினான் இலங்கை வேந்தன் என்று புராணங்களிலே எழுதப்பட்டது..நம் இந்தியாவைப் பொறுத்தவரை வங்கியில் கடன் வாங்கி ஏமாற்றும் கோடீஸ்வரர்கள் நிறையபேர் இருந்தாலும் கடன் அட்டையைப் பயன்படுத்துபவர்கள் இங்கே மிகவும் குறைவுதான்..

உலக அளவில் அதிகமான கிரெடிட் கார்டு பயன்படுத்தும் நாடு அமெரிக்காதான்..அமெரிக்காவில் ஒருவரே 20,, 30 கடன் அட்டை கூட வைத்திருப்பார்களாம்..2018 பிறந்த பிறகும் கூட நம் நாட்டில் வெறும் 3 கோடி பேர் மட்டுமே கிரடிட் கார்டு பயன்படுத்துகிறார்கள்..நம் மக்கள் தொகையில் 5 சதவீதம் பேர் கூட இல்லை..

இதை நல்லதா ,கெட்டதா என்று சொல்லமுடியவில்லை..ஏனெனில் உண்மையில் யாருமே கடன் வாங்காமல் வாழ்கிறார்களா என்றால் இல்லை என்றுதான் கூறமுடியும்..இந்தியாவில் மக்கள் கொஞ்சம் முன்னெச்சரிக்கையானவர்கள் என்பது எல்லோரும் அறிந்ததே..

கிரடிட் கார்டைப் பற்றி சொன்னாலே நம்மில் பலரும் தூரமாய் ஓடுகிறார்கள்..அநியாயமாக வட்டி போட்டு வாங்குவார்கள்; தேவையற்ற பிரச்சனை வரும் என்று நினைக்கிறார்கள்..ஆனால் உண்மை அதுவல்ல..உண்மையில் சரியான செலவுக்கு சரியான நேரத்தில் பயன்படுத்தி சரியான நேரத்தில் சரியாக திருப்பிச் செலுத்திவிட்டால் எந்தப் பிரச்சனையும் இல்லை..குறிப்பிட்ட தேதிக்குள் செலுத்தத் தவறினால்தான் வட்டியோடு செலுத்த வேண்டியிருக்கும்..

கிரடிட் கார்டு பற்றி ஒரு சில விஷயங்கள் மற்றும் தெரிந்துகொண்டால் போதும்..உங்களுக்கு கொடுக்கப்பட்ட அதிகபட்ச தொகைக்கு எந்தப் பொருள் வேண்டுமானாலும் நம் அவசரத் தேவைக்கு வாங்கிக் கொள்ளலாம்..குறிப்பிட்ட தவணைத் தேதிக்குள் திருப்பிச் செலுத்திவிட்டால் ஒரு பைசா வட்டி கூட இல்லை..

இன்றைய அவசர வாழ்க்கையில் அவசரத்தேவைக்கு எவன் ஒரு பைசா வட்டியில்லாமல் கடன் கொடுக்கிறான்..வாங்குவதில் இருக்கும் பொறுப்பு திருப்பிச் செலுத்துவதிலும் இருந்தால் எந்தப் பிரச்சனையும் இல்லை..

கடன் அட்டையில் இருக்கும் ஒரே பிரச்சனை திருப்பிச் செலுத்தும்போது வங்கியில் சென்று challan மூலம் செலுத்தினால் அதற்கு ஒரு 100 ரூபாய் charge போடுவார்கள்..அது ஒன்றுதான் பிரச்சனை..PAYMENT காசோலை மூலமாகவோ internet banking மூலமாகவோதான் செலுத்த வேண்டும்..

கிரடிட் கார்டு பயன்படுத்தி ஏமாற்றுபவர்களின் பட்டியலில் இந்தியா உலகில் மூன்றாம் இடத்தில் உள்ளது. இந்த நிலை மாறினால் கிரடிட் கார்டு பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை நிச்சயம் உயரும்..அவர்களால்தான் மற்றவர்கள் பயப்படுகிறார்கள்..நேர்மையாக இருப்பவர்கள் நிச்சயமாய் பயப்படத் தேவையில்லை கிரடிட் கார்டைப் பார்த்து..மறைமுகக் கட்டணமெல்லாம் எதுவுமில்லை.

இன்று பல வீட்டு சுபநிகழ்ச்சிகளின் அவசர செலவுக்கு ஆபத்தில் உதவுவது கிரடிட் கார்டு என்றால் மிகையில்லை..

கிரடிட் கார்டு இருக்கிறது என்பதற்காக தேவையே இல்லாமல் கண்ட பொருளையும் வாங்கிக்குவித்தால் நிச்சயமாய் கிரடிட் கார்டு சாபமே..அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சுதானே..

தேவைக்கேற்ப அளவோடு பயன்படுத்தினால் கிரடிட் கார்டு வரமே..வாங்க நினைப்பவர்கள் தைரியமாக வாங்குங்கள்..கடன் வாங்கி வாழ விரும்பாதவர்களுக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை..சந்தேகம் இருந்தால் விளக்கத் தயாராய் உங்கள் கலியபெருமாள்..