Sunday 11 February 2018

பகுத்தறிவை ஏற்போம்..கொஞ்சம் பாரம்பரியமும் காப்போம்..

நல்லார் ஒருவர் உளரேல் அவர்பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் மழை என்பார்கள்..அதுபோலத்தான் நம் முன்னோர்களின் பண்பாட்டையும் பாரம்பரியத்தையும் விரல் நுனியில் பிடித்துக் கொண்டிருக்கும் சிலரால்தான் இன்னமும் என் தேசம் அழியாமல் இருக்கிறது..


இயற்கையைத்தான் நம் முன்னோர்கள் கடவுளாக வணங்கி வந்தார்கள்..கடல்,மலை,மழை,சூரியன், சந்திரன்,கோள்கள் என அனைத்தையும் கடவுளாக வழிபட்டனர்..அதுவரை மனிதன் நல்லவனாகவும் இயற்கையை நேசித்தும் வந்தான்..ஆனால் இயற்கை வேறு, கடவுள் வேறு என்று எண்ண ஆரம்பித்த நாளில் மனித இனத்தின் அழிவு துவங்கியது..உலகில் கடவுள் இல்லை என்று பகுத்தறிவு பேசத்தொடங்கிய நாளில்  நம் பாரம்பரியமும் ஒவ்வொன்றாக காணாமல் போகத்துவங்கியது..

பகுத்தறிவாளர்கள் யாரும் உடனே சண்டைக்கு வந்துவிடாதீர்கள்..நான் பகுத்தறிவுக்கு எதிரானவன் அல்ல...சந்தேகம் இருந்தால் தலைப்பைப் படிக்கவும்..

நான்கு எழுத்து படித்துவிட்டோம் என்ற மமதையில் நம் பெற்றோர் எந்த பழக்கம் சொன்னாலும் அதில் குற்றம்குறை கூறி அவர்களைப் படிக்காத முண்டங்கள் என்று கேலி செய்தோம்..ஆனால் அவர்களின் பழக்கவழக்கங்கள் எல்லாம் இன்று அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்படுகிறது..நானும் கூட என் தாத்தா பாட்டியை நக்கலடித்திருக்கிறேன் பட்டிக்காடுகள் என்று..

இன்று நமக்கு அறிவுரை கூற மூத்தோர்களும் யாரும் நம் வீட்டில் இல்லை..இயற்கையும் இங்கே இல்லை..சாப்பிடும் இலைகூட செயற்கையில் வந்துவிட்டது...

செயற்கைக்கோள் எல்லாம் விட்டு செவ்வாய்க் கோளை சிவப்புக்கோள் என்று சமீபத்தில் கூறியவன் அமெரிக்காகாரன்..ஆனால் பெயரிலேயே செவ் வாய் என்று பல நூறு ஆண்டுகளுக்கு முன்னரே அழைத்தவன் தமிழன்.

தாலிக்கயிறையே இன்று சிலர் அசிங்கமாக நினைக்கிறார்கள்..ஆனால் தாலிக்கயிறில் மஞ்சள்பூசி குளித்தால் மார்பகப்புற்றுநோய் வராது என்று ஒரு வெள்ளைக்காரன் சொன்னால்தான் நாம் கேட்போம்..குழந்தைகளைப் போட்டோ எடுத்தால் ஆயுசு குறையும் என்று நம் தாத்தாக்கள் கூறுவார்கள்..இன்று கேமராவின் ஒளிக்கதிர்கள் குழந்தைகளின் கண்பார்வையையும் மூளை நரம்புகளையும் பாதிக்கும் என்று அறிவியல் அறிஞர்கள் கூறுகிறார்கள்..

வீட்டிற்குள் நகம் வெட்டவேண்டாம் என்றது, தொப்புள்கொடி தாயத்து கட்டுவது, கோபுர கலசங்கள் அமைத்தது, விரதங்கள் மேற்கொண்டது, கீழே அமர்ந்து இலையில் சாப்பிட்டது, திருவிழா சடங்குகள், காலையில் பழையசாதம் சாப்பிட்டது என்று எதைப்பட்டியலிடுவது நம் முன்னோர்களின் அறிவை அறிய..அவர்கள் படிக்காத மேதைகளாய் இருந்திருக்கிறார்கள்..நாமோ படித்த முண்டங்களாய் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்..கோவில்களில்  கடவுள் இருப்பதாக நம்பவேண்டாம்..பழங்கால கோவில்கள் அனைத்தும் மனிதனுக்கு புத்துணர்ச்சியை வழங்கிய சக்திமையமாக இருந்திருக்கின்றன என்பதில் ஐயமில்லை..

கடவுளை நம்புகிறீர்களோ இல்லையோ இயற்கையை நம்புங்கள்..மூடநம்பிக்கைகளையும் கொஞ்சம் மறுபரிசீலனை செய்யுங்கள்..அதிலும் ஏதாவது அறிவியல் உண்மை ஒளிந்திருக்கலாம்..ஆலங்குச்சியையும், மாட்டுச்சாணத்தையும் நம்மூரிலும் பாக்கெட்டில் விற்கும் காலம் வரலாம்..விடுபட்டவைகளை விமர்சனத்தில் விவாதிப்போம்..மூத்தோர் சொல்வார்த்தை அமிர்தம் என்னும் கொன்றைவேந்தன் வரிகளோடு விடைபெறுகிறேன்...நன்றியுடன் கலியபெருமாள்..

6 comments:

  1. தங்களது ஆதங்கம் ஒவ்வொரு வரிகளிலும் இழையோடுகிறது நண்பரே.

    ReplyDelete
    Replies
    1. என்னுடைய ஆதங்கம் மட்டுமல்ல..பலருடைய ஆதங்கம் இதுவாகத்தான் இருக்கும் என்று நினைக்கிறேன்.நன்றி நண்பரே.

      Delete
  2. மூத்தோர் சொல்வார்த்தை அமிர்தம் என்பது அனுபவம் தந்த உண்மை.

    பதிவு மிக அருமை.

    ReplyDelete
    Replies
    1. பெரியோர்கள் பேச்சைக் கேட்காததால்தான் இன்று நோயாளிகள் நிறைந்த தேசமாகிப்போனது..நன்றி அம்மா.

      Delete